Sunday, February 18, 2018

இந்து மதத்தில் அற்புதங்கள்...

உலகில் வேறு எந்த நாடுகளிலும் வேறு எந்த மதத்திலும் நடைபெறாதஅற்புதங்கள் நம் கோவில்களில் ஏராளமான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
1.சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
2. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
3. நாகர்கோவில் கேரளபுரம்சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.
4. வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.
5. திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு லிட்டா் லிட்டராக அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது.
6. ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்துபானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால்பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.
7. கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.
8. கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல் கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.
9. முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக வருகின்றன.
10. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
11. திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
12. தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது.
13. காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
14. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
15. திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
16. குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் 6 மணிநேரம் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.
17. ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
18.திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7 புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல் விட்டு விட்டு சாலை அமைத்தனர்.
19. திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
20. சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
21. அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், கயிறுகுத்துதல் , குழந்தையை மண்ணில் புதைத்து எடுத்தல் (குழிமாற்றுத்திருவிழா) போன்ற நோ்த்திக் கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
22. சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
23. திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
24. திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்சுடுவதில்லை.
25.பத்ரிநாத் சிவன்கோவிலில் நவம்பா் முதல் வாரத்தில் நடைசாத்தப்படும்போது ஏற்றி வைக்கப்படும் விளக்கு மே மாதம் முதல் வாரத்தில் நடை திறக்கும்வரை 6 மாதம் எாிந்துகொண்டே இருக்கிறது.
26. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்திசாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாகநிற்கிறது.
27. காட்டுநாயக்கன்பட்டி மற்றும் விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
28. ஆழ்வாா்குறிச்சியில் கல்லினால் ஆன நடராஜா் சிலையை தட்டினால் வெண்கல ஓசை வருகிறது.
29. தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
30. ஆந்திராவில் அனந்தபூா் மாவட்டத்தில் லேபாக்ஷிவீரபத்ரா் கோவில் மற்றும் தா்மபுரி மல்லிகாா்ஜூனா் கோவிலில் இரு தூண்கள் தரையில் படாமல் நிற்கின்றன.
31. குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
32. தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
33. தூத்துக்குடி புதுக்கோட்டையில் பத்ரகாளியம்மன்கோவிலில் ஆடி மூன்றாம் செவ்வாயன்று நடைபெறும் கொடை விழாவின்போது கோவிலுக்குள் பெண்கள் முளைப்பாாி எடுத்துவரும் சமயம் சிறுமிகள் அருள்வந்து ஆடுகின்றனா்.
34. மகாராஷ்ட்ரா அகமது நகா் மாவட்டத்தில் சிங்கனாபூாில் சனீஸ்வரா் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக வீடுகளுக்கு கதவு, பெட்டிகளுக்கு பூட்டு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா்.
35. தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போதுபிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
36. பத்ரிநாத் அருகில் வென்னீர் ஊற்றும் குளிர்ந்த நீர் ஊற்றும் அருகருகில் உள்ளன. வென்னீர் ஊற்றில் அாிசியை துணியில் முடிந்து வைத்தால் சாதமாக வெந்துவிடுகிறது.
37. சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
38. சுனாமியினால் பிறமத வழிபாட்டு தலங்களில் ஏராளமான மக்கள் இறந்தனா். ஆனால் கடலுக்கு மிக அருகில் இருக்கும் கன்யாகுமாி பகவதி அம்மன்கோவில், உவாி சுயம்புலிங்க சுவாமி கோவில், திருச்செந்தூா் முருகன் கோவில், மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவில்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
39. மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
40. மந்திரங்களின் மூலம் தேள்கடி, பாம்புக்கடி, நாய்கடி விஷத்தை (பாா்வை பாா்த்து) குணமாக்குகின்றனா். நாய் வாயைக் கட்ட முடிகிறது.
41. சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
42. சில குறிப்பிட்ட ஹோமங்களில் கிலோ கணக்கில் மிளகாய் வற்றலை போட்டாலும் வரும் புகை இருமல், தும்மல் ஏற்படுத்துவதில்லை.
43. பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் மலையடிவார சிவகங்கா கிராமத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ள கவிகங்காதீஸ்வரர் என்ற பெயருடைய சிவபெருமானுக்கு
நெய்அபிஷேகம் செய்து தரும்நெய் வெண்ணையாக மாறி விடுகிறது.
44. கேரளா மாநிலம்.திருச்சூர், வடக்கும்நாதர் சிவன் கோவில்நெய் அபிஷேகம் செய்துநெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை.உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.
45. பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே சித்தநாத் ஆஸ்ரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.
46. ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
47. வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையானவியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது
48. ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது..
49. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
50. செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்
51. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
52. தஞ்சை மாவட்டம் பசுபதிகோயில் அஞ்சல் திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல்காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்
53. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
54. ஒரிசாவில் கோனார்க் சுரிய கோவிலில் சுரியன் 200 ஆண்டுக்கொருமுறை கோவிலின் நடுவிலிருந்து உதிக்கிறது. தோ்ச்சக்கரத்தில் நிழல் விழுவதை வைத்து நேரத்தை சரியாக பார்க்க முடிகிறது.
55. உஜ்ஜைனி காலபைரவா் கோவிலில் சாமியின் வாயில் வைக்கப்படும் மது கலந்த பிரசாதம் மறைந்துவிடுகிறது.
56. குஜராத்தில் ஸ்தம்பேஸ்வரர் மகாதேவா் கோவில் அலை அதிகரிக்கும்போது கடலுக்குள் முழுவதும் மூழ்கி மறைந்துபின் அலை குறைந்தவுடன் வெளிப்படுகிறது.
57. நேப்பாளத்தில் புத்தானிகாந்தாவில் 5 மீட்டா் நீளமுள்ள கல்லினாலான மஹாவிஷ்ணு சிலை நீரில் மிதக்கிறது.
54. ஒரிசாவில் கோனார்க் சுரிய கோவிலில் சுரியன் 200 ஆண்டுக்கொருமுறை கோவிலின் நடுவிலிருந்து உதிக்கிறது. தோ்ச்சக்கரத்தில் நிழல் விழுவதை வைத்து நேரத்தை சரியாக பார்க்க முடிகிறது.
55. உஜ்ஜைனி காலபைரவா் கோவிலில் சாமியின் வாயில் வைக்கப்படும் மது கலந்த பிரசாதம் மறைந்துவிடுகிறது.
56. குஜராத்தில் ஸ்தம்பேஸ்வரர் மகாதேவா் கோவில் அலை அதிகரிக்கும்போது கடலுக்குள் முழுவதும் மூழ்கி மறைந்துபின் அலை குறைந்தவுடன் வெளிப்படுகிறது.
57. நேப்பாளத்தில் புத்தானிகாந்தாவில் 5 மீட்டா் நீளமுள்ள கல்லினாலான மஹாவிஷ்ணு சிலை நீரில் மிதக்கிறது.
58. ஆந்திராவில் ஹைதராபாத் அருகில் பெனகல்லில் சாயா சோமலிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் மூன்று கருவறைகளில் ஒன்றில் சிவலிங்கத்துக்கு பின்னால் எப்போதும் ஒரு தூணின் நிழல் விழுகிறது. மற்றொரு சன்னதியில் நின்றால் நான்கு நிழல்களும், மற்றொன்றில் நம் நிழல் எதிர்திசையிலும் விழுகிறது.
62. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேகோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
63.கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது
64. மகாராஷ்ட்ரா அவுரங்காபாத் மாவட்டத்தில் எல்லோரா குகை கோவில்கள்ஒரே மலையைக் குடைந்து 18 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. (நவீன விஞ்ஞானத்தால் சாத்தியமில்லாதது)
65. மாமல்லபுரத்தில் கிருஷ்ணா் பந்து என்ற பாறையை எவ்வளவோ முயன்றும் அசைக்கவே முடியவில்லை.
66. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
67. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
68.ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
69. கர்நாடகாவில் மல்லேஸ்வரம் சிவன்கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் நந்தியின் வாயிலிருந்து 3000 ஆண்டுகளாக நீர் கொட்டுகிறது
70.மைசுா் அருகில்ஸ்ரீரெங்கம் கோவிலில் தவறான உத்தரவால் ஸ்ரீரெங்கநாதர் பக்தையான அலமேலு என்பவரின் கர்ப்பம் கலைய காரணமாகஇருந்ததற்காக மைசுர் மகாராஜா உடையாா் பரம்பரைவாாிசே இல்லாமல் 900 வருடங்களாக தத்து எடுத்து வருகின்றனா்.
71. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
🏵️ ஆன்மீக செய்திகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...