Sunday, April 8, 2018

அத்தனை_வலுவற்றதா_என்மதம்.

ஒருவர் இந்து மதத்திலிருந்து... 
வேறு ஒரு மதத்திற்கு மதம் மாறுகிறார்.
அவர் மதம் மாறியவுடன் சிறிது காலம் கடந்து .... 
இந்து மதம் ஒரு பிசாசு மதம்,
அதில் உண்மையான கடவுள் இல்லை.
ஆகையால் நான் என் நண்பர் உதவியுடன் வேறு
ஒரு மதத்திற்கு மாறிவிட்டேன்.
எனக்கு அவரின் அன்பை உணரச்செய்து அவரையே வணங்கச் செய்தார்..
. நான் இப்பொழுது முழு ஆனந்தத்தோடு இருக்கிறேன்....
என்று தனது பழைய இந்து நண்பரிடம் கூறி நீயும்
எங்க மதத்திற்கு வா என்று அழைக்கிறார்...
••
அதற்கு அந்த இந்து நண்பர் பதில் சொன்னார். ‘
நீ இந்து மதத்தை பின்பற்றிக் கொண்டிருந்த போது
வேறு மதத்தின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும்,
அந்த மதங்களையும், மனிதர்களையும் மதிக்கவும்,
அவர்கள் வீட்டில் உணவு உண்ணவும் கத்துக்கிட்ட..
அதனால் தான் நீ வேறு மதம் மாற முடிந்தது.
ஆனால் மதம் மாறியவுடன் நாள் கணக்காக
வேறு மதத்தை இழிவு செய்யவும்... திட்டவும், தூசிக்கவும், வஞ்சிக்கவும் கற்றுக்கொண்டாய்.
இதைதான் உன் புதிய மதம் உனக்கு கற்று கொடுத்திருக்கிறது !!! இப்பொழுது நீ ஒழுக்கம் இல்லாமல் பேசுகிறாய்.
இப்போது சிந்தித்து பார் ....
எந்த மதம் தனி மனித சுதந்திரத்தை, பண்பையும், நாகரிகமாக பேசுகின்ற ஒழுக்கத்தை கற்று தருகின்ற, போற்றுகின்ற மதம் என்று கேட்டேன்.
••
அதன் பிறகு அவன் மதம் குறித்து என்னுடன் பேசுவதில்லை...
••
மதம் என்பது மன அமைதிக்காகவும், மனித ஒழுக்கத்தையும், அனைவரிடத்தில் அன்பு செலுத்தவும், ஒருவருக்கொருவர் நட்பு பரிமாறிக்கொள்ள மட்டும்தான் மதமே தவிர.... அனைவருடைய அன்பை, அமைதியை, நட்பை, குடும்பத்தை சீர்குலைக்க அல்ல. சிந்திச்சுக்கங்க அப்றமா மதம் மாறிட்டு எங்ககிட்ட மத பிரச்சாரம் பண்ண வாங்க ...
••

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...