Thursday, May 10, 2018

கர்பப்பை பிரச்சினைகளுக்கு நாட்டு மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உண்டு.

காசு பிடுங்க செய்யப்படும் அனாவசிய அறுவை சிகிச்சைகளில் முதலிடம் வகிப்பது கர்ப்பபை அகற்றும் சிகிச்சை. அமெரிக்காவில் நடக்கும் கர்ப்பபை அகற்றும் சிகிசைகளில் அவசியம் அற்றவை 85%. ஆக 85% கர்ப்பபை அகற்றும் சிகிச்சைகள் அனாவசியமானவை. இந்தியாவில் நிலை இன்னும் மோசம். விவரம் அறியாத பெண்கள் "உனக்கு கர்ப்பபை கான்சர் வரும் அபாயம் உண்டு" என சொல்லபட்டு கருப்பை அகற்றபடுகின்றனர். இதற்கு அடிப்படை ஒரு எக்ஸ்ரே அல்லது ஸ்கான். பயாப்சி செய்யாமல் கான்சர் இருக்கா இல்லையா என கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எத்தனை பேருக்கு அப்படி பயாப்சி செய்யபடுகிறது? பல சமயங்களில் 40 வயது ஆனால் மருத்துவர்கள் கர்ப்பபையை எடுக்க சொல்லி ஏதோ டான்சில் ஆபரேஷன் மாதிரி பரிந்துரை கொடுத்துவிடுகிற
ார்கள். கான்சர் என்றதும் படிக்காத பெண்கள் பயந்துபோய் "நமக்கு தான் ஏற்கனவே ரெண்டு பிள்ளை இருக்கே. இனி எதுக்கு கர்ப்ப பை" என சொல்லி ஆபரேஷனுக்கு ஒத்துகொள்கிறார்கள்.
கர்ப்பபை அகற்றியபின் அவர்கள் உடல் மிகவும் தளர்வடைந்து வீக் ஆகிவிடும். மார்டைப்பை தடுக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மொன் சுரப்பது தடைபடும். கர்ப்பபை என்பது வெகு அபூர்வமாக, பலத்த சோதனைக்கு பின் அகற்றபடவேண்டியது. அது சாதாரண சர்ஜரி அல்ல. ஆனால் புற்றீசல் போல் அப்படி சர்ஜரி செய்யும் மருத்துவர்கள் பெருகி வருகிறார்கள். சிசேரியன்கள் பெருகியது போல் இதுவும் பெருகுகிறது. உங்கள் மருத்துவர் இதை பரிந்துரைத்தால் உடனே ஒத்துகொள்ள வேண்டாம். பயாப்சி செய்ய சொல்லி கேளுங்கள். இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒபினியன் கேளுங்கள். கர்ப்பபை அகற்றம் மிகுந்த பின்விளைவுகளையும், நீண்டநாள் பாதிப்புக்களையும் உருவாக்ககூடியது.இது உண்மை யான செய்தியா எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது இது குறித்து தெளிவான விளக்கம் தெரிந்தால்கருத்துதெரிவிக்கலாம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...