Thursday, May 17, 2018

நல்லதை மட்டும் பார்த்தால் இது தேவை இல்லாதது....

அருள்மொழி என்ற தி.க. பெண்மணி ஒருவர், டிவி விவாத நிகழ்ச்சி என்ற பெயரில் வழக்கம் போல்  ஹிந்துக்கள் பழக்கத்தையும் இழிவாக கேலி செய்து பேசியுள்ளார் . விரட்ட விரட்ட நாம் இனி ஓட கூடாது. நம் குலஆண்கள் மேற்சட்டை அணியாமல் கோவிலுக்குள் வழி பட செல்வது வெட்கப்பட வேண்டும் என்கிறார். நான் கேட்கிறேன் , இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை ? இது எங்கள் பாரம்பரிய குல வழக்கம். அதோடு எம்குல பெண்கள் கோவிலுக்கு போனால், அடக்க ஒடுக்கமாக, பக்தியோடு, இறை உணர்வே மேலோங்க வழிபாடு செய்ய போவார்கள். பிற ஆண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும் வழக்கும் எங்களுக்கு இல்லை. தெய்வீகத்தை தவிர வேறேதும் உணர்வில் இருக்காது. ஆனால் எம்குல ஆண்கள் மேற்சட்டை அணியாமல் இருப்பது உங்கள் கண்களையும் மனதையும் ஈர்த்தால் , உறுத்தினால் அது உங்கள் எண்ணங்களின் குற்றம். என்ன செய்வது நீங்கள் சார்ந்திருக்கும் இடம் அத்தகையது. ஆண்கள் மேற் சட்டை அணியாமல் கோவில் வழிபாடு செய்வதை விமரிசிக்கிறீர்களே ..பெண்கள் எப்போதும் மேற்சட்டை அணிவதை எதிர்த்தவர் உங்கள் அருமை தந்தை. இதை உண்மை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். உங்கள் செயலுக்கேற்ப எண்ணங்கள்.
உடம்பில் படாமல் நூலை (பூணூலை) எடுத்தால் என்ன என்று கேட்கிறீர்கள் ...எம்குல ஆண்கள் அணிந்த தெய்வீக தேஜஸ் நிறைந்த பூணூல் உங்களை என்ன செய்கிறது ? அதை கவனிக்கவாநீங்கள் வெளியில் வருகிறீர்கள் ? எதனால் இத்தனை ஆற்றாமை,ஆத்திரம் , பொறாமை ?
அடுத்தது, நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுகாரரை அண்ணா என்றும் கணவரைதான் மாமா என்று அழைப்பதாகவும் சொல்கிறீர்கள். பக்கத்து வீட்டுக்காரரை அண்ணா என்று தான் நீங்கள் அழைத்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் மனைவி காலில் போடுவதை கையில் எடுத்து கொள்வார். சரி, அப்பா ,அண்ணா , பிள்ளை ஆகியோரை என்னவென்று அழைப்பீர்கள் ? ஏனென்றால் உங்கள் தந்தையின் கொள்கைகள் அப்படி..உங்கள் மணியம்மை கணவரை உங்கள் தந்தையை எப்படி அழைத்தார்கள் ? அப்பா என்று அழைத்தவரை மாமா என்று அழைக்க நேரும் முன் , எம்குல மற தமிழ் பெண்கள் முழ கயிற்றில் கயிற்றில் தொங்கி விடுவார்கள் . அந்த நிலைக்கு எம்குல பெண்களை தள்ள ஒருக்காலும் துணிய மாட்டார்கள் தன்மான தமிழ் ஆண்கள். எம் குலம் என நான் சொல்வது நற்குடி பிறந்த அனைத்து ஹிந்து பெண்களையும் தான். அறிஞர் அண்ணா இது சம்பந்த மாய் எழுதிய கட்டுரையை உங்களால் மறுக்க முடியுமா ? பெண்களை எப்போதும் இழிவு படுத்துவதே உங்கள் கொள்கையாகி போனது.
விஷயம் தெரியாமல் உளறக்கூடாது. அண்ணா என்றோ , அப்பா என்றோ அழைத்ததில்லை எம் நற்குலப்பெண்கள .. என்னங்க ‘ என்ற வார்த்தையின் திரிபே ‘ என்ன ‘ என்று அழைக்கும் சொல். அது உச்சரிக்கும் போது வேறு அர்த்தம் தொனித்தால் அது கேட்பவர் குற்றமே தவிர அழைப்பவர் குற்றம் இல்லை. அடுத்தவர் மேல் சேற்றை வாரி இறைக்கும் போது உங்கள் மேல் உள்ள மலத்தை உணருங்கள். பொழுது போகாமல் எங்களை சீண்டி கொண்டிருப்பதை விட்டு இனியாவது சிறிது உபகாரமாக யாருக்காவது பிரயோஜனமாக ஏதாவது நல்லது செய்ய முயற்சியாவது செய்யுங்கள் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...