Saturday, May 5, 2018

அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் ஆட்சியர் அன்பழகன்.

தனக்கு கார் ஓட்டிய டிரைவர், பணி ஓய்வு பெற்ற நாளில்,தனது காரில் அமர வைத்து வீடுவரை காரை ஓட்டி சென்று பிரியா விடை கொடுத்தார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.
கரூர் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வருபவர் அன்பழகன்.
இவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் பரமசிவம்.
கரூரில் தொடர்ந்து பல மாவட்ட ஆட்சியர்களுக்கு டிரைவராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றார்.
வழக்கம் போல் ஆட்சியர் பணி முடித்து அவரது வீட்டிற்கு அழைத்து செல்லும் டிரைவர் பரமசிவம் அதற்க்காக காத்திருந்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே பணி முடித்து வந்த ஆட்சியரை அழைத்து செல்ல தயாரானார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தான் வயது முதிர்வு காரணமாக இன்றுடன் பணி ஓய்வு பெறும் தகவலை தெரிவித்தார்.
இதனை கேட்டவுடன் தன்னை போன்ற ஆட்சியர்களுக்கும்,தனக்கும் கார் ஓட்டிய பரமசிவத்திற்கு மன நிறைவு பெறும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த மாவட்ட ஆட்சியர் உடனே அதனை செயல்படுத்தவும் செய்தார்.
உடனே ஓட்டுனர் பரமசிவத்தை காரின் முன் இருக்கையில் அமரவைத்து காரை தானே இயக்கினார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.
காரை இயக்கியவாறே பரமசிவத்தின் வீட்டு விலாசத்தை கேட்டார்.
அவர் அருகில் உள்ள காந்திகிராமத்தில் தன் வீடு இருப்பதை கூறியவுடன் காரை பரமசிவம் வீட்டை நோக்கி செலுத்தினார்.
வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டு அவரது குடும்பத்தாரையும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் ஆட்சியர் அன்பழகன்.
தன் பணி காலத்தில் பெரும்பாலான நாட்களில் கரூரில் பணி புரிந்த ஆட்சியர்களுக்கு தான், கார் ஓட்டும் பணியில் ஈடுபட்டார்.
பரமசிவம் மேலும் பணிகாலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்க்காக சில விருதுகளும் பெற்றுள்ளார்.
அப்படிபேர் பெற்ற டிரைவர் பரமசிவம் தான் பணி ஓய்வு பெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் தன்னை காரில் அமரவைத்து காரை ஓட்டி வந்து தனது வீட்டில் கொண்டு வந்து விட்டு இன்ப அதிர்ச்சி அளித்த மாவட்ட ஆட்சியரை பார்த்து நெகிழ்ந்தார் டிரைவர் பரமசிவம்....!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...