Sunday, May 20, 2018

ஆச்சரியம்.ஆனால் உண்மை.

கைலாஷ் மலையை இதுவரை ஏறியவர்கள் எவரும் இல்லை! முயற்சித்தவர்கள் வயோதிகர்களாக இறந்தது மட்டுமே மிச்சம்! இதன் மர்மம் என்ன? மலை மொத்தமும் DNA மூலக்கூறுகள்! வியந்த விஞ்ஞானிகள்!
-----------------------------------------------------------------------------------
12 மணி நேரம் கைலாஷ் மலை ஏறினால் மனித உடல் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது. நகம், முடி அனைத்தும் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது! இது வரை யாராலும் கைலாஷ் மலையை முழுமையாக ஏறியதில்லை. ஏற முயற்சித்தவர்களும் திரும்பியதில்லை.
Dr Ernst Muldashev இரஷ்ய விஞ்ஞானி:
-----------------------------------------------------------
எர்நெஸ்ட் முல்டஷேவ் என்னும் இரஷ்ய விஞ்ஞானி கைலாஷ் மலையில் உள்ள இரகசியங்களை உடைத்தெரிய எண்ணினார். அதன்படி கலாஷ் மலையை ஆராய்வதற்காக வந்தார். இதுவரை ஏன் எந்த மனிதனாலும் கைலாஷ மலையை ஏற இயலவில்லை என்பது குறித்து ஆராயத் தொடங்கினார். பல திபெத்தியர்கள் மற்றும் சைபீரியர்களிடம் விசாரித்ததில் கைலாஷ் மலையில் ஷம்பாலா என்னும் குடிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். முதலில் நம்பாமல் இருந்த இரஷ்ய விஞ்ஞானி பிறகு இரவில் மலையை சுற்றி ஏற்பட்ட சத்தத்தை வைத்து மலையின் உள்ளே யாரோ வசிப்பதாக உறுதிபூண்டார். அதுமட்டுமல்லாமல் இந்த உலகின் ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் கருதினார்.
வயதாகி இறக்கும் மர்மம்:
-----------------------------------------
இந்த மலையை ஏற முயற்சித்த அனைவரும் வயதாகி இறந்திருந்தனர். அதாவது 24 வயது மதிக்கத்த ஆள் மலையை ஏற முயற்சித்தால் 90 வயதானவராக மாறி வயோதிகம் காரனமாக இறந்திருக்கிறார். எவ்வாறு குறுகிய காலத்தில் இவ்வாறு வயதாக சாத்தியமாகும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்றளவும் விந்தையாகவே உள்ளது.
Image may contain: outdoor and nature
DNA வடிவம்:
--------------------
இரஷ்ய விஞ்ஞானி எர்னஸ்ட் முல்டஷேவ் கைலாய மலை மொத்த மலையையும் திட்ட வரைபடமாக தீட்டினார். தீட்டி முடித்து பார்த்ததும் அதிசயித்துப் போனார். மொத்த வரைபடமும் DNA வடிவில் காட்சியளித்தது. இது அவருக்கு பெருத்த ஆச்சரியத்தையும், ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்ற அவரது எண்ணமும் முற்றிலும் உண்மைதான் என்ற தகவலை அளித்தது.
மனிதனால் செய்யப்பட்டதா?
----------------------------------------------
அவரின் ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டுமொத்த மலையையும் (Pyramid) மனிதனின் பெரிய கைகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முடித்தார். இவ்வளவு பெரிய மலையை செய்யும் பெரிய கைகள் எந்த உயிரினத்துக்காவது இருக்கிறதா என்ன?
ஆதாரச் சொடுக்குகள்:
-----------------------------------
https://www.rbth.com/…/when-a-russian-doctor-tried-to-crack…
http://www.ancientpages.com/…/mysterious-mount-kailash-sec…/
-----------------------------------------------------------------------------------
தீ சட்டி எடுப்பது, அக்னி மிதிப்பது இதெல்லாம் செய்ய கடவுள் அருள் தேவை இல்லை என்று விதண்டாவாதத்துக்கு செய்துகாட்டும் நாத்தீகவாதிகள், கைலாயம் ஏறுவதை ஒரு சவாலாக ஏற்று செய்து காட்டலாமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...