Sunday, May 6, 2018

காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அடங்கியுள்ள சத்துக்கள்
பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.
உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.
Image may contain: food
இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.
சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.
முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
காராமணி சாதம்
வானலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.
1.பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும்.
2. குக்கரில் அரிசி, காராமணி, புளி தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. தக்காளி நன்கு மசிந்தவுடன், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி, குக்கரில் சேர்க்கவும்.
4. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான காராமணி சாதம் தயார்.
பயன்கள்
நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.
இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...