Wednesday, June 29, 2022

அற்பம்........அற்புதம்.....

 மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் வளர்கின்றன....

*ஒரே மண்ணைத் தின்று*,
*ஒரே தண்ணீரைக் குடித்து*
*ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்
*வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும்
ருசியில் வேறுபட்டது இருப்பதுபோல..*
*நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து
வந்தவர்கள்தான்.*
*ஒரே நீரைத்தான் அருந்துகிறோம்,
*ஒரே காற்றை சுவாசிக்கிறோம்*.
*ஆனால் போகிற போக்கில் நாம் எதை
சேகரித்து நம்மில் உள்ளடக்கிக்
கொள்கிறோமோ
*அதைப் பொறுத்துத்தான் நம்முடைய*
தனித்தன்மை வெளிப்படும்....!!!*
*நாம் எதை சேர்க்கின்றோம்
*அற்பத்தையா....?
*இல்லை அற்புதத்தையா......
*அற்பம், ஆறு* *குணங்களாகும்*
*1. பேராசை*
*2. சினம்*
*3. கடும்பற்று*
*4. முறையற்ற பால்* *கவர்ச்சி*
*5. உயர்வு தாழ்வு மனப்பான்மை*
*6.* *வஞ்சம்*
*அற்புதம், ஆறு* குணங்களாம்*
*1. நிறை மனம்*
*2. பொறுமை*
*3. ஈகை*
*4. கற்பு நெறி*
*5. சம நோக்கு*
*6. மன்னிப்பு*
*இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து* *கொண்டால்
*அற்பம் நம்மை எட்டிப் பார்க்காது....!!!*
*அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது
*சிந்திப்போம்**தெளிவடைவோம்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...