Wednesday, June 29, 2022

கட்சி பாகுபாடின்றி செயல்படுவது தான் #நாட்டு_பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை...,
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய #ஜனாதிபதி"
அரசியல் வேறுபாடுகளை கடந்து...
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர் #வாஜ்பாய்.
இந்திய பிரதமராக #நரசிம்மராவ்
செயல்பட்ட போது...
எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.
அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், #ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
அப்போது,
"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டு''மென்ற மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான #அமெரிக்கா #பாக்கிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது..!
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் #சரியாக_அமையாத காரணத்தால்...அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக #இந்திய_ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும்,
''ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான #வாஜ்பாயே சிறந்தவர்'' என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று...குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை, தனி விமானத்தில் #ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும்
#சீனா மசோதாவிற்கு ஆதரவு.
#ரஷ்யா_மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு.
பிரான்சும் பிரிட்டனும் முடிவெடுக்காத நிலை. இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை #அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதியது. பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..
அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம், #அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன...
வாஜ்பாயி -
"எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை #வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு... அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால்...
இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு #இந்தியா ஆதரவளிக்கும்"..என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
பத்திரிகைகள் -
"எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை #இந்திய அரசு ஏற்குமா"..? - என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்...
வாஜ்பாயி -
"நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை... இந்தியாவின் #தலைமைப் #பிரதிநிதியாக வந்துள்ளேன்... ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்... எனது முடிவே இந்தியாவின் முடிவு" என்று கூறினார்.
வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி
வெளியான சில மணி நேரங்களில்... பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக #நேசக்கரம் நீட்டின. காரணம், அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.
அடுத்த நாள்,
இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா #தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.
மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை.... வழக்கத்திற்கு மாறாக... விமான நியைத்திற்கு சென்று இந்திய #ஜனாதிபதி வரவேற்றார்.
இந்தியாவை எந்த கட்சி வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யலாம்...அந்த ஆட்சியை குறை சொல்லலாம் ஆனால் ஆளும் கட்சியை விமர்சிப்பதற்காக #இந்தியாவை விமர்சிக்க கூடாது...
பாஜக அரசை பாசிச அரசு என்று நீ தரம் குறைக்கும் போது வருத்தம் இல்லை...
இந்திய அரசை #ஒன்றியரசு என்று
தரம் குறைக்கும் போது வேதனையாக உள்ளது...
பாஜவை விமர்சிக்கலாம்..
மோடியை விமர்சிக்கலாம்... ஆனால்
#ஜெய்ஹிந்த் என்ற தேசிய முழக்கத்தை விமர்சிக்க கூடாது
மோடி அரசை விமர்சிக்கும் போது
நீ எதிர்கட்சி... #ஜெய்ஹிந்த் என்ற நமது தேசிய முழக்கத்தை விமர்சிக்கும் போது நீ தேசதுரோகி....
பாரத் மாதா கி ஜெய்..!
May be an image of 6 people, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...