Thursday, June 22, 2023

கிரகப்பிரவேசம்.

 செல்வி பிரியாம்மா வீட்டுல வேலை பாத்தா. பிரியாம்மாவும் அவங்க வீட்டுக்காரரும் அவமேல பிரியமும் நம்பிக்கையும் வைச்சிருந்தாங்க. குடுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்கதான் அவளோட மகனையும் படிக்க வைச்சிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டுபேருமே வேலைக்கிப்போறதுனால அவங்களுக்கு இவளோட வேலை தேவைப்பட்டது. அவங்களுக்கு ஒரு மகளும் இருந்தாஅம்முன்னுதான் அவளை இவ கூப்புடுவா.. அவ எப்பவும் இவ பின்னாடிதான் நிப்பா.

ஆண்டி ஆண்டின்னு நிப்பா. அவளுக்கு எதுனாலும் இவதான் செய்யனும். குளிப்பாட்ட. டிரஸ் போட சாப்பிட எல்லாம் இவதான் ... காலையில 7 மணிக்கி வந்தா 11 மணி வரை வேலை திரும்ப 4 மணிக்கி வந்தா 7 மணி வரை வேலை. பத்துப்பாத்திரம் தேய்க்கிறது வீடு கூட்டிக்கழுவுறது வீட்டைச்சுத்தம் பண்ணுறது குழந்தைய சமாளிக்கிறது
வாசிங்க் மிசின்ல துணிதொவச்சி காயப்போட்டு எடுத்துவைக்கிறது ந்னு பலவேலை சமயத்துல சமையலும் இவளே பாப்பா. பிரியாம்மாவோட வீட்டுக்காரரு எந்த வேலையும் தொடமாட்டாரு. வேலைக்கிபோறது மார்க்கெட் போறது அத்தோட அவர் வேலை முடிஞ்சது. ஆனா அவருக்கு சாப்பாடு வகையா இருக்கனும்
அதுனால பிரியாம்மாவுக்கு அவரை சமாளிக்கிறதே பெரிய வேலை அவரோட அம்மா முடியாம இருந்தப்ப அவங்களையும் இவ பாத்துக்கிட்டது பெரிய விசயம். ரெண்டுபேரும் வேலைக்கிப்போற வீட்டுல ஒரு வயசான அம்மா முடியாம இருந்தா எவ்வளவு பிரச்சனை இருக்கும் ஆனா இவ முகம் சுளிக்காமப்பாத்துக்கிட்டா
பிரியாம்மாவும் அவங்க வீட்டுக்காரரும் சேந்து வேற ஒரு எடத்துல புதுசா வீடு வாங்குனாக. இப்ப இருந்த வீடு வாடகை வீடு. அதுனால கடன்ல ஒரு வீட்டை வாங்கி அங்க குடிபோறதுன்னு முடிவெடுத்தாக. அது மாதிரி வேற ஏரியாவுல தொலைவில வீடு வாங்கினாங்க. அங்க செல்வியால போக முடியாது. அங்க வேற வேலைக்காரிதான் வைச்சிக்கனும்ன்னுஆயிப்போச்சு. வாங்கின வீட்டுக்கு கிரகப்பிரவேசம் வைச்சாங்க. அப்பவே சொன்னாங்க நீதான் வந்து எல்லா ஒதவியும் பண்ணிக்குடுக்கணும். கட்டாயமா வந்துருன்னாக. அவளும் சரின்னா
பிரியாம்மா சொன்னா அவளோட வீட்டுக்கார் கிட்ட செல்விக்கு நல்ல சேலையும் அவளோட மகனுக்கு டிரஸ்சும் எடுத்துக்குடுக்கணும்ன்னு சொன்னா
அவளோட வீட்டுகாரர் சரின்னாரு
சொந்தக்காரங்களுக்கு எல்லாம் வைச்சிக்குடுக்குறதுக்கு டிரஸ் எடுக்கப்போனப்ப பிரியாம்மா ஞாவகப்படுத்துனா செல்வி விசயத்தை
அவரும் அங்க விசாரிச்சி அவ கட்டுறமாதிரி 500 ரூவாக்கி சேலையும் அவளோட மகனுக்கு 500 ரூவாக்கி டிரஸும் வாங்கிக்கிட்டாக
கிரகப்பிரவேசத்துல எல்லாவேலையும் செஞ்சி குடுத்தா செல்வி . எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. அப்ப அவங்க வாங்குன டிரஸை அவளுக்கு ஸ்வீட் மேல ஆயிரம் ரூ கவருல வைச்சி அவளுக்குக்குடுத்தாங்க
அவளும் வாங்கிட்டு கண்கலங்குனா. அப்ப பிரியாம்மா கேட்டாங்க ஏம்மான்னு இல்லை இவ்வளவு நல்ல உங்ககிட்ட இனிமே என்னால வேலை செய்யமுடியாதேன்னா. ஆமா எங்களுக்கும் வருத்தமாத்தான் இருக்கு
பிரியாம்மா சொன்னாங்க. அப்ப செல்வி ஒரு பத்திரிக்கை குடுத்தா. அம்மா நானும் சின்னதா ஒரு வீடுகட்டிருக்கேன் வார ஞாயித்துக்கிழமை பால் காய்ச்சுறேன் நீங்க கட்டாயம் வரணும்ன்னா. சரின்னாங்க
அதுபோலவே அவளோட வீடு பால்காயச்சப்போயிருந்தாங்க ரெண்டுபேரும். வீடு சின்ன வீடுதான் அடக்கமா அழகா இருந்துச்சு,பேங்க் லோன் கவர்ன்மெண்ட் உதவில கட்டிருக்கதா சொன்னா.
அங்க ரிப்பன் கட்டிருந்துச்சு. அவ இவங்களை வைச்சித்தான் கட் பண்ணி வீட்டைதொறந்துவைச்சாங்க. அதுலயே அவங்க அசந்துபோய்ட்டாங்க அப்புறமா
இவங்களைச்சாப்பிடசொன்னா செல்வி. இவங்க கொஞ்சம் தயங்குறதப்பாத்துட்டு சொன்னா அய்யா யோசிக்காதீங்க நீங்க வழக்கமா சாப்புடுற சங்கீதாவுல இருந்துதான் உங்களுக்காக வாங்கிட்டு வந்துருக்கோம்.ன்னா. கொஞ்சம் யோசனை பண்ணுனப்போ அவளே சொன்னா பார்சல்தான் நீங்க வீட்டுல போய்கூட சாப்புடலாமுன்னா,
இவங்க வாங்கிக்கிட்டாங்க. அவகிட்ட 500 ரூ கவர் குடுத்தாங்க. அப்ப கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டுப்போயிட்டு ஒரு கவர் எடுத்துட்டு வந்தா செல்வி .அதுல ஒருபட்டுப்புடவையும் நல்ல பேண்டு சர்ட்டும் குழந்தைக்கு நல்ல டிரஸும் இருந்துச்சு. எப்புடிப்பாத்தாலு 8000 ரூ இருக்கும். அதைப்பாத்துட்டு பிரியாம்மாவும் அவ வீட்டுக்காரரும் ஆடிப்போய்ட்டாங்க. ஏம்மா இப்படின்னு கேட்டாங்க.
அப்ப செல்வி சொன்னா நான் வாங்குறடிரஸ் நீங்க போட்டுக்கிறமாதிரி இருக்கணும். கடமைக்கு ஏதாவது வாங்கிக்குடுத்தா நீங்க போடமாட்டீங்க யாருக்காவது குடுத்துருவீங்க. அதுனாலதான் அம்மா வாங்குறகடையில அம்மா வாங்குறமாதிரி டிரஸும் நீங்க வழக்கமா சாப்புடுற ஓட்டல்ல இருந்து சாப்பாடும் ஏற்பாடு பண்ணேன்....
எங்களை நீங்க வாழத்தனும் எனக்கு அம்மா அப்பா இல்லை. அவங்க ஸ்தானத்துல ஒங்களை நான் வைச்சிருக்கேன்ன்னு சொல்லிட்டு குடும்பத்தோட கால்ல விழுந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணனும்ன்னா. கண்கலங்க
பிரியாம்மா வோட கண்ணும் கலங்கிடுச்சு
ஆரும் பாக்காம அவளோட வீட்டுக்காரரும் கண்ணத்தொடச்சிக்கிட்டு ஆசீர்வாதம் பண்ணுனாரு...
.
May be an image of 2 people, temple and text
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...