Monday, June 19, 2023

திமுக_குமட்டல்_பேச்சாளர்கள்.

 திமுக வின் பேச்சாளன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய பேச்சு மீண்டும் ஒரு குமட்டல் ரகமே..!அந்த கண்ராவி பேச்சை , எந்த வித தடங்கலும் இன்றி மேடையில் அமர்ந்து பேச அனுமதித்தவர்களும், அதை அல்ப காசு வருமானத்திற்காக அமைதியாக அமர்ந்து கேட்டவர்களும், (இத்தனைக்கும் பல மகளிர்கள் குடும்ப உறுப்பினர்களோடு வந்திருந்தனர்) வெட்கித் தலை குனிய வேண்டும்..!

இது போன்ற தொடர் பேச்சுகள் எப்படி தலைமையின் ஒப்புதல் இன்றி நடைபெற முடியும்..!? ஒப்புதல் இல்லை என்றால், பேச்சு தடம் மாறும்போதே அவரை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டாமா..?!
திமுக என்ற ஒரு குடும்ப அமைப்பு தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய பன் முனை, பல கட்ட தடுப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது.. அதில் இந்த தரம் தாழ்ந்த பேச்சாளர்களும் ஒரு வலிமையான அமைப்பே..! மானமரியாதை உடைய எதிரிகளை மனம் நிலை குலை வைக்க , இவர்கள் கையில் வைத்திருக்கும் துருப்பிடித்த தகர ஆயுதம் இது..!
எதி்ப்புகள் வலுவாக எழுந்தால் .."அப்படியா .?!எனக்குத் தெரியாதே..!?! நான் நடவடிக்கை எடுக்கிறேன்..!" என்று சொல்லிவிட்டு ப்ரச்சினையை கைகழுவி விடுவதும்.. அல்லது குற்றத்தை அந்த தனி நபர் மீது சுமத்தி விட்டு, தானும் தன் குடும்ப உறுப்பினர்களும் தப்பித்துக் கொள்வதே இவர்கள் வாடிக்கை..!இவர்களையும் நம்பி ஒரு பெருங்கூட்டம் தரம் தாழ்ந்து பேசவும் , அதை கை தட்டி ஆதரிக்கவும் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது..!சில சொற்ப பணத்திற்காக..!இவர்களைக் குஷிப்படுத்தவே இத்தகைய பேச்சுகள் அரங்கேறுகின்றன..! ஏனெனில் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த சிந்தனைகள் உடைய ,அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறக்கும் எண்ணமுடைய , சமூகத்தை சரியாகப் பார்க்கத் தெரியாத, அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மாக்களே இவர்களது வாக்கு வங்கிகள்..!
தாங்கள் இப்படி கீழ்த்தரமான தரத்தில் வாழ வைக்கப் படுவதை இவர்கள் உணர ஆரம்பிக்கும் நாளே தமிழகத்திற்கான மாற்றம் ஏற்படும் நாள்..!
அதற்குத் தேவை தரமான கல்வி..! அதை அவர்கள் அடைந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வதே இன்றைய அரசியல்..!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...