Wednesday, June 21, 2023

❤️ *அன்பு உலகை ஆளும்.*❤️

 *கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...*

*உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.* *அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?*
*சண்டை ...*
*சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.*
*இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.*
*அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.*
*"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.*
*உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார்.*
*இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."*
*மனைவி சிரித்தாள்.* *தன் தவறை உணர்ந்தாள்.-*
*அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள்.* *அதனால் காபியில் எறும்பும் சாகவில்லை.* *அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....*
*வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.*
*நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்...*
*நாம் தவறே செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...*
*தவறுகளை நகைச்சுவையாகவோ*
*அன்பாகவோ சொல்லிப்பாருங்கள்..*
*அந்தத் தவறு மறுபடி நடக்காது...*
*ஆனால் காட்டுக்கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக் காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும் என்பதை மறவாதீர்கள்!!*
*சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது.*
*"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.*
ஆனாலும்
*ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.*
ஆனால்
*நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே*
*அதெப்படி?"*
*அதற்கு சாவி,*
*"நீ என்னை விட பலசாலிதான்.*
*அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.*
*பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*
ஆனால்
*நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்" என்றதாம்.*
🏵️ *அன்பு உலகை ஆளும்* 🏵️
💧 *பொறுமையைவிட மேலான தவமுமில்லை.*
💧 *திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.*
💧 *இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.*
💧 *மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும்.*
*இருளை விலக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்*
. *முடியும் வரை அல்ல,*
*உங்கள் இலக்கினை அடையும் வரை*.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...