Tuesday, June 20, 2023

*தனிஷ்டா பஞ்சமி*

 இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள்
13 என்கிறார்கள்.
அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய
5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. என்பார்கள் ஆச்சார்யர்கள்.
ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு உண்டு.
கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு இருக்கிறது.
மிருகசீருஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
*பிறக்கும் போது நட்சத்திரத்தையும்,*
*இறப்புக்குத் திதியையும்* நினைவில் கொள்வோம்.
ஆனால் *இறக்கும் போதும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம்* என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள் சித்தர்கள். *தனிஷ்டா பஞ்சமி* என்று அழைப்பதும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
*தனிஷ்டா பஞ்சமி* என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவி ரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராட்சத வடிவிலோ தோன்றி பயமுறுத்தி,
6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...