Saturday, May 27, 2017

ஆண்டவன் சாட்சியாக இவை அனைத்தும் உண்மையே – உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆண்டவன் சாட்சியாக இவை அனைத்தும் உண்மையே – உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

ஆண்டவன் சாட்சியாக இவை அனைத்தும் உண்மையே – உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
இப்போதெல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் சமூக வலைதளங்களான
முகநூல் (ஃபேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்அப்), ட்விட் டர், போன்றவற்றின் மூலமாக‌  எந்தவொரு செய்தியானாலும், தகவலானா லும் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து விடுகிறது இது நல்ல‍ விஷயமாக இருந்தாலும், பல பொய்யான‌ செய்திகளையும் தவறான தகவல்களையும் சில வே ண்டுமென்றே திட்ட‍மிட்டு பரப்பிவிடுகின்றனர். இது அவர்கள் தெரிந்து செய்கிறார்களோ அல்ல‍து தெரியாமல் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அந்த வகையில் இதுவரையில் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் பொய்யான செய்திகளையும் தவ றான தகவல்களையும் சுட்டிக்காட்டுவது தான் இந்த கட்டுரையின் நோக்க‍ம்.
1) ‘ஜனகண மன’ பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரி க்கப்பட்டது
=> தவறான தகவல்
*

*
2) பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது
=> அது சினிமா செட்..
*

*
3) குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவி விட்டது
=> இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.
*

*
4) திருநள்ளாறு கோவிலின் மேலே வரும்போது செயற்கைக் கோள் நின்றுவிடும்
=> உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?
*

*
5) இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு
=> பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத  ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் …
*

*
6) இந்தக்குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்
=> ஒருஷேர்க்கு ஒரு ரூபாய்னா, அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?
*

*
7) இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்
=> இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?
*

*
8) ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு
=> போட்டோசாப் வேலை…

*
9) இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்
=> இருக்குற டேட்டாவும குறையும் …
*

*
10) மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்
=> புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச் சுருக்காரா?
*

*
11) இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா. சபை வாக்கெடுப்பு நடத்துகிறது
=> பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.
*

*
12) 599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்
=> அமேசான மூட போறாங்களா?
*

*
13) குழந்தையைக் காணோம்
=>அக்குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க் கிட்டிருக்கு.  கொழந்தகெடச்ச பின்னாடியும், இனி குழந்தை காணாமபோனா தேதியோப்போடுங்க.
*

*
14) ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்
=> தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?
*

*
15)இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்
=> அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?
*

*
16) 3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு
=> எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.
*

*
17) தடுப்பூசி போட்டால் ஆபத்து
=> பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக் கொள்ளவில்லை.
*

*
18) 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது
=> பொய்
*

*
19) வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது
=> அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.
*

*
20) டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்
=> ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.
*

*

21) இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை
=> அவன் காசு. அவன் இஷ்டம்.
*

*
22) நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப்பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு…
=> இன்னும் இது மாதிரி  நிறைய….
*

*
“இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க”
*எப்போதாவது வாட்ஸப் உபயோகிக்கும் நண்பர்கள் , புதிதாக மொபைல் உபயோகிக்கும் நண்பர்கள், தயவு செய்து எந்த மெசேஜ்யும் பார்வர்ட் செய்யாதீர்கள். ஒரு மாதம் அனைத்து மெசேஜ்யும் படியுங்கள். உங்களுக்கே புரியும்.  நீங்கள் அனுப்பும் மெசேஜ் எற்கனவே 2232 தடவை எங்களுக் கு வந்துவிட்டது*
இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடைய வேண்டு ம்.
எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ் புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களு க்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண் பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங் களை வந்துசேர்ந்தால்கூட பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந் திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடு வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...