Sunday, May 28, 2017

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்*

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு
காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் *உடல் பலவீனம்,*

இரண்டாவது *கண்திருஷ்டி*
நம் உடலில் *ஏழு சக்கரங்கள*் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல
விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர
வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர்
தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும்
சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.
மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே
பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில்
இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து
பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் *கடல் தண்ணீர்*
கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு
சக்கரங்களும் பலம் பெறும்.
எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி
வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து
நம்முடைய உடலில் உள்ள *சப்த சக்கரங்களை* பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த
வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண
பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம்
நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை
சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி
விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு
கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால்
குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை
எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு
சக்கரங்களும் பலப்படும்.
*ஸ்ரீராமர்* பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த
லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில்
அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு,
*கடல் நீரே விசேஷமானது* என்றார் ஸ்ரீராம பிரபு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...