Saturday, May 13, 2017

தினகரனை கழட்டிவிடும் முடிவில் சசிகலா!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைக்காட்சியான ஜெயா டிவி நிர்வாகம் முழுவதும் இளவரசியின் மகன் விவேக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரையில் உள்ள இளவரசி மற்றும் சசிகலாவை சந்திக்க சென்ற விவேக்கிடம், சில உத்தரவுகளை பிறப்பித்த சசிகலா, ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும்படி கூறியதோடு, டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் எக்காரணத்தைக் கொண்டும் நிர்வாகத்தில் தலையிடமால் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினாராம்.
அதன்படி, ஜெயா டிவி நிர்வாகத்தை உடனடியாக கையில் எடுத்துள்ள விவேக், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகியை போயஸ் தோட்டத்திற்கு வரச் சொல்லி, இனி நிர்வாக ரீதியாக எந்த முடிவெடுப்பதானாலும் என்னையோ கீர்த்தனாவையோ கேட்காமல் செய்யக் கூடாது என்று அவர்களிடம் சொல்லிவிட்டாராம்.
ஜெயா டிவி மட்டும் அல்ல கட்சியில் இருந்தும் டிடிவி தினகரனை முழுவதுமாக கழட்டி விடும் முடிவுக்கு சசிகலா வந்திருப்பதாகவும், அவரிடம் இருந்து விரைவில் சில அதிரடியான அறிவிப்புகள் வெளியாகும், என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...