Monday, May 29, 2017

*காயிதே மில்லத்*

இந்தி மொழி பற்றி *காயிதே மில்லத்* அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் 
கணை போல் தொடுத்தார்.
*காயிதே மில்லத்:* இந்தியாவின் தேசிய மொழி எது?
பதில்: "இந்தி"
*காயிதே மில்லத் :* ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்?
பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.
*காயிதே மில்லத் :* இந்தியாவின் தேசியப் பறவை எது?
பதில்: மயில்.
*காயிதே மில்லத் :* மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு. இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் *காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?*
யாரும் வாய் திறக்கவில்லை.
*காயிதே மில்லத்:* எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால், *இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?*
யாரும் வாய் திறக்கவில்லை.
*காயிதே மில்லத் :* கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது. சவாலாகச் சொல்கிறேன். *தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.*
*நேரு* கேட்டார்.., நீங்கள் ஒரு முஸ்லீம், ஏன் தமிழ் மீது பற்று?
காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்..
*இஸ்லாம் எனது வழியாகும்...*
*இன்பத் தமிழே எனது மொழியாகும்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...