Wednesday, May 31, 2017

உங்க திட்டம்னு தெரிஞ்சுபோச்சி.....



ஐயா மோடிஜி இந்திய மக்கள் நாங்கெல்லாம்
உங்கள பெரிய அறிவாளின்னு நெனச்சிகிட்டு
இருந்தோம்...இப்பதான் தெரியுது நீங்க மறை
கழண்ட ஆளுன்னு....நோட்டு எல்லாம் செல்லாதுன்னு
நீங்க அறிவிச்சப்ப ஊழல ஒழிக்கிற மிகப்பெரிய வேலைன்னு நெனச்சோம்....ஆனா ஏழைங்க 400
பேருக்கு மேல செத்ததுதான் மிச்சம்....ஆயிரம் ரூவா
நோட்ட பதுக்குனா இடம் அதிகமாகும்னு ரெண்டாயிரம்
ரூவா நோட்ட உட்டீங்கன்னு அப்புறமாதான் தெரிஞ்சுது..
இப்ப மாட்டுக்கறி திங்ககூடாதுன்னு சொல்றீங்க...
ஆக மொத்தத்துல ஏழைகளை ஒழிக்கிறதுதான்
உங்க திட்டம்னு தெரிஞ்சுபோச்சி.....
ஐயா ஏழைகளை முன்னேத்துறோம்னு சொல்லி
அவங்கள அழிக்கிற வேலய சூப்பரா செய்யுறீங்க...
ஐயா நாளைக்கு எங்க வீட்ல மீன் செய்யலாம்னு
இருக்கோம்.....அத நாங்க சாப்பிடலாமுங்களா...?
ஐயா தயவு செய்து நீங்க வெளிநாட்டுக்கு போறத
நிறுத்துங்க....அந்த நாட்ட எல்லாம் பாத்துட்டு
இந்தியாவும் அப்படி வரணும்னு சொல்லிட்டு
நீங்க போடுற சட்டம் எல்லாம் கோமாளித்தனமா
இருக்கு.....நம்ம இந்தியாவுல அதுக்கேத்த கட்டமைப்பு
வசதி வர்றதுக்கே பல வருசம் ஆகும்னு ஒரு லூச
கேட்டாலும் சொல்லிடும்....இது ஏன்யா உங்களுக்கு
தெரியாம போச்சி....நீங்களும் ட்ரம்ப்பும் ஒரே ஆளுங்கதான்னு இப்பவே நாட்டு மக்கள் எல்லாம்
பேசிக்கிறாங்க.....மிச்சம் இருக்கிற ரெண்டு வருசமும்
நீங்க பண்ண தப்புக்கெல்லாம் கோயில் கோயிலா போய்
பரிகாரம் தேடிக்கிங்கைய்யா....அதான் உங்களுக்கு நல்லது....உங்க ஆத்மாவுக்கும் நல்லது....
இந்தமாதிரி நீங்க மூணு வருசமா இந்தியாவுக்கு
பண்ண நல்லத எல்லாம் சொல்றதுக்கு எனக்கு
ஒருநாள் பத்தாதுங்கைய்யா.....ஏதோ மனசுல பட்டத
சொல்லிட்டேன்யா.....தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்கைய்யா......இல்லைனா என்ன தேச
விரோத வழக்குல போட்டுறுவீங்கன்னு என் உள்மனசு
சொல்லுதுங்கய்யா.......ஆனா ஒன்னுய்யா
ஹிட்லர நீங்க மிஞ்சிட்டீங்கய்யா.....!!!!!!!!!!!!!!
Image may contain: 2 people, flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...