Monday, May 15, 2017

நீ... நீயாக இரு !

நீ... நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான்.
தகரம் மலிவு தான்.
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது.
அதனால் தகரம் மட்டமில்லை.
தங்கமும் உயர்ந்ததில்லை.
எனவே நீ... நீயாக இரு !
கங்கை நீர் புனிதம் தான்.அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை.
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ... நீயாக இரு !
காகம் மயில் போல் அழகில்லை தான்.
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
நீ... நீயாக இரு !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான். ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
நீ... நீயாக இரு !
பட்டு போல் பருத்தி இல்லை தான். ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல் பூமி இல்லைதான். ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை...
இன்று போல் நாளையில்லை.
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை ! நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
உன்னை உரசிப் பார்.உன்னை சரி செய்து கொண்டே வா.
நீ... நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ... நீயாக இரு !
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
நீ... நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
நீ... நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ... நீயாக இரு !
நீ... நீயாகவே இரு !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...