Wednesday, November 7, 2018

முக்கிய செய்தி...

சமீப காலமாக நிலவும் சீரற்ற காலநிலையால் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது.அதிக தலைப்பாரம்,வாந்திபேதி, வயிற்றோட்டம், உடல் அசதி, உடல்வலி, நாள்பட்ட இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை நாடவும்.
இந் நோயின் தாக்கத்தினால் கடந்த ஆறு தினங்களாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டேன்.இன்றுவரை படுக்கையில் தள்ளப்பட்டதுடன் உணவு மற்றும் நீரைக் கூட பருக முடியாமல் கஷ்டப்பட்டு விட்டேன்.
ஆகவே தயவு செய்து உங்களை இந் நோயின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை நாடவும்.ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்வதன் மூலம் பெரிய அளவில் பாதிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும்.
நான் வேலை காரணமாக பனடோல் மட்டும் எடுத்துக் கொண்டதால் தான் இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தேன்.நோயின் தீவிரம் வைத்தியருக்கே தெரியும் என்பதால் நீங்களாக மாத்திரைகளை எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...