Saturday, November 17, 2018

சபரிமலை புனிதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதானே.

சபரிமலை விஷயத்தில் எல்லா வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர போகக்கூடிய பெண்கள் சபரிமலை விரதத்தை கடைபிடிக்கத் தேவையில்லை என்றோ கடைபிடிக்கக்கூடிய சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையில்லை என்றோ கூறவில்லை. அவைகளை மீற வேண்டுமென்றோ கூட சொல்லவில்லை. இதை பெண்கள் கவனத்தில் கொள்ளவேயில்லை. காரணம் அது அவர்களுக்குத் தேவையில்லை.
இப்போது சபரிமலை கோயிலுக்கு வர துடிக்கும் பெண்கள் இதை செய்திருக்கிறீர்களா?
முதலில் யாராவது ஒரு குருசாமியைத் தேர்ந்தெடுத்து ஒரு கோயிலில் சென்று மாலை அணிவித்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை. மாலை குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
கடைசிநாள் குருசாமியின் மூலம் இருமுடி கட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும்.
இருமுடியோடு மலை ஏறி பல கி.மீ நடக்க வேண்டும்.
கன்னி (முதல்முறையாக மாலை போட்டு விரதமிருப்பவர்) சாமியாக இருந்தால் வீட்டில் பூஜை போடவேண்டும்.
இது குறைந்தபட்ச சடங்குகள், சம்பிரதாயங்கள்.
உச்சநீதிமன்றம் தீர்ப்புவந்தவுடன் சபரிமலைக்கு வர முயற்சி செய்த பெண்கள் இதில் எதையாவது செய்திருக்கிறார்கள் என்று இவர்களுக்கு வக்காலத்து வாங்கிய தலைவர்கள் நிரூபிக்க முடியுமா?
அப்படியானால் வர துடிக்கும் பெண்களின் நோக்கம் என்ன? அதை ஆதரிக்கும் தலைவர்களின், கட்சிகளின் நோக்கம் என்ன? சபரிமலை புனிதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதானே.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அதனால் 10 வயது முதல் 50வரையுள்ள பெண்கள் வரக்கூடாது என்பதை நம்பிக்கையுள்ள பெண்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அதை காப்பாற்றியும் வருகின்றனர்.
ஆனால் **ரிகள் எப்போதும் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு இது புரிவதும் இல்லை. காரணம் அவர்கள் **ரிகளாக இருப்பதால்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...