Tuesday, November 13, 2018

மெல்ல கொல்லும் நஞ்சு....ரீபைண்ட் ஆயில்... !!!!!

* ரீபைண்ட் ஆயில் என்றாலே சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் என்றுதான் நினைத்து வருகிறோம்.ஆனால் ரீபைண்டு ஆயில் சுத்தமாக உயிர் சத்துகளே இல்லாத சக்கை எண்ணெய் ஆகும்.
*ரீபைண்ட் ஆயில் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
* திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் 'சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்’ என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
* சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதற்காக பெரிய தொகைகளை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
* நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
* இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில். யோசிச்சு பாருங்க இவ்வளவு கெடுதலான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி,நாமே விலை கொடுத்து நம் ஆரோக்கியத்தை பாழ்படுத்திக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...