Saturday, November 17, 2018

குமாரகோயில் கல்லிடைக்குறிச்சி...

அம்பாசமுத்திரமும், கல்லிடைக்குறிச்சியும் இரட்டை நகரமாக தாமிரபரணியின் கரையில் அமைந்து பழமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
பழமைகள் பல நிறைந்து இருந்தாலும் நவீன யுகத்தில் உருவான கோயில்களும் கல்லிடைக்குறிச்சியில் உண்டு. அவ்வாறு உருவான கோயில் தான் கல்லிடைக்குறிச்சி முருகன் கோயில். இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் இருக்கும். கல்லிடைக்குறிச்சியில் வைகுண்டம் பிள்ளை என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மிகப்பெரிய செல்வந்தர். மாதம் தோறும் வெள்ளிக்கிழமை வில் வண்டியில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்குவார். அதன் பிறகு தான் ஊருக்கு வருவார்.
ஒரு நாள் பயங்கரமான காற்றுடன் மழை பெய்தது. இதனால் வில் வண்டி பூட்ட முடியவில்லை. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பயணத்தினை துவங்க முடியவில்லை. திருச்செந்தூர் முருகனை வழிபட முடியாத பிள்ளை இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தார். ‘முருகப்பெருமானே’ ஏன் இந்த சோதனை என்று மனமுருக வேண்டி நின்றார். பிள்ளை சிறிது கண் அயர்ந்த போது கனவு தோன்றியது. அதில் முருகன் தோன்றினார். கனவில் தாமிரபரணி ஆற்றில் ஊர்காடு அருகே உள்ள திருவலம்சுழியில் என்னுடைய சிலை உள்ளது.
அதை எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கு. திருச்செந்தூர் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறினார். மறுநாள் காலை மழை நின்றதும் பிள்ளை தனது ஆட்களை கூட்டிக்கொண்டு ஊர்காடு சென்றார். அங்கு திருவலம்சுழியில் தோண்டிப்பார்க்க ஏற்பாடு செய்தார். கனவில் முருகன் கூறியது வீண் போகவில்லை. முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அதை எடுத்து கொண்டு கல்லிடைக்குறிச்சியில் பிரதிஷ்டை செய்தார்கள்.
அதுதான் கல்லிடைக்குறிச்சி
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த கோயில்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...