இந்த கஜா புயல் சென்னையை தாக்கி இருந்தால்
இன்னேரம் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பகிர்ந்து இருப்பார்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நிவாரணம் பொருட்கள் சென்று இருக்கும்
அனைத்து மீடியாவும் 24 மணி நேரமும் பாதித்த பகுதி முழுவதையும் திரும்ப திரும்ப காட்டி உலகம் முழுவதும் பரவி இருக்கும்
நடிகர் நடிகை எல்லாம் பண உதவி செய்து இருப்பார்கள் சில நடிகர்கள் களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்
மேலே சொன்ன அனைத்தும் சென்னையில் கஜா புயல் தாக்கி இருந்தால் நடந்து இருக்கும்
கஜா புயல் தாக்கியது வேதரண்யம் நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டம் தானே ஆதலால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
சென்னைக்கு ஒன்னுனா தமிழ்நாட்டுல இருக்க எல்லா மாவட்டத்து சேர்ந்தவங்களும் உதவராங்க ஆனால் இதே மற்ற மாவட்டதுக்கு ஒன்னுனா உதவ கூட தேவை இல்லை சமூக வலைதளங்களில் அந்த மாவட்டத்தின் பாதிப்புகளை பேச கூட மாட்றீங்க யாரும்
ஏன் இந்த பாகுபாடு?



No comments:
Post a Comment