Saturday, November 17, 2018

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருந்ததினால் மனித இழப்புக்கள் குறைந்தது .

கஜா புயல் நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை மிகவும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் எச்சரிக்கையை அலக்ஷியப்படுத்தியதால் ஒருசில உரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருந்ததினால் மனித இழப்புக்கள் குறைந்தது என்பது மிகவும் உண்மை. முரண்பாடான கருத்துக்கள் மற்ற கட்சியினரால் பெரிதுபடுத்தப்பட்டாலும், முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களது திறமையான நடவடிக்கைகளால் ஒவ்வொரு விஷயத்திலும் நற்பெயர் பெற்று வருகின்றனர். இருவரும் கட்சிக்குள்ளேயும், ஆட்சிக்குள்ளேயும் ஏராளமான எதிர்ப்புக்களையும்,சோதனைகளையும் சந்தித்த போதும் எந்த ஒரு விஷயத்திலும் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றனர். ஒருசில அமைச்சர்கள் பேட்டியின் போது மாறுப்பட்ட விதத்தில் பேசினாலும் செயல்பாடுகளில் பம்பரமாக செயல்படுகின்றனர். இயற்கையின் சீற்றத்தை எந்த அரசாலும் தடுக்கமுடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும் குறிப்பாக உயிர்சேதத்தை தடுக்க முடியும் என்று நிரூபித்த முதல்வர் துணை முதல்வர் இருவருக்கும் மனம் திறந்த பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...