Tuesday, November 6, 2018

ஓலி ஒளி பகிர்தல் நன்று...

கோவில் மணி ஓசை பலரும் கேட்டிருப்பீர்கள்
அதிலும் குறிப்பாக ஓணாங்குடி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் மணியோசை
ரொம்பவே வித்தியாசப்படும்...
சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் வயல்காடுகளிள் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கும் இந்த மணியோசை கேட்டால் போதும்
எதோ ஒரு பரவசநிலை ஏற்படும்...
Image may contain: outdoor

எந்தகாலத்திய மணியென யாரும் வரையருத்து வயது சொல்லமுடியவில்லை
அவ்வளவு பழமையானது...
அந்த மணியோசையை போல வேறெங்கும் மணியோசை கேட்டதில்லை
அந்த மணியோசையை கைப்பேசியில் பதிவு செய்து ரிங்டோனாக வைத்திருந்தவர்கள் பலர்
அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என கேட்கறீங்களா..??
இண்ணைக்கு கோவிலுக்கு போயிருந்த நண்பருக்கு போன் செய்ய நேர்ந்தது வழக்கமான மணியோசை இல்லாமல் மின்சார மங்கலவாத்தியம் என்ற நாராசஓசை
ஒலித்தது...
எதற்காக கோவிலில் நமது முன்னோர்கள் மணியோசை ஒலிக்கச்செய்தார்கள் என்ற
காரணம் தொலைத்தவர்களுக்கு
தெரியப்படுத்தவே இந்தப்பதிவு...
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை...
காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள்...
கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா..??
மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும்...
No automatic alt text available.
இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும்...
இது 7 நொடிகள் வரை நீடிக்கும் மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும்...
அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும்..
அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள் மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்..!!
இவ்வளவையும் தொலைத்துவிட்டு நாகரீகம் என்ற பெயரில் மின்சார மங்கல வாத்தியம்
இசைப்பதுதான் காலக்கொடுமை...!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...