Sunday, November 4, 2018

தலைவலி போக்கும் தைவேளை.

அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்
நல்லவேளை என்றழைக்கப்படும் தைவேளை வெள்ளைப் பூ பூக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. படத்தைப் பாருங்கள். சிகப்பு தண்டுள்ளது அதிக சக்தி உள்ளது.
தைவேளை இலையை கீரையாக சமைத்து சாப்பிட வேண்டுமானால் பூக்கள் பூப்பதற்கு முன் பறித்து நெய்யில் பொறித்து சாப்பிட
இருமல் சளி மார்பு வலி தீரும்.
மலக் கழிவுகளை வெளியேற்றும். பெண்களுக்கு உதிரச் சிக்கலைப் போக்கும்.
தலைவலிக்கு
சிறிது தைவேளை இலை சிறிது சோற்று உப்பு ஒரு நாட்டு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து மூன்று சொட்டு வலது காதில் விட இடது பக்க தலைவலியும் இடது காதில் விட வலது பக்க ஒற்றை
தலைவலியும் தீரும்.
மேலும் பல வருடங்களாக இருக்கும் தலை வலிக்கு அதிக அளவு இலை எடுத்து பிழிந்து சாற்றை நீக்கி விட்டு இலைச் சக்கையை தலை முழுவதும் பரப்பி ஒரு துணியால் கட்டி
15 நிமிடம் கழித்து அந்த இலைச் சக்கையை பிழிய தலைநீர் சாறு போல் வெளியேறும். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து அதேபோல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்ய நாட்பட்ட தலைவலி தீரும்.
தைவேளைப் பூ
தைவேளைப் பூக்கள் அதிகம் பூத்த ஊரின் அப்பகுதியில் முதலில் தொண்டை வலி வரும். பின் சளி இருமல் காய்ச்சல் அதிகம் வரும். இந்த பூ பூக்கும் நாளில் பூக்களைப் பறித்து சின்ன வெங்காயம் மிளகு சீரகம் தேங்காய் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட சாப்பிட்ட சாப்பிட்ட அன்றே தொண்டை வலி தீர்ந்து விடும்
மேலும் மூன்று தினங்கள் சாப்பிட்டவர்களுக்கு தற்போது நிலவும் எந்த விதமான காய்ச்சலும் வராது. மேலும்
நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி மாறி ஆண்மை சக்தி அதிகரிக்கும். மழை காலத்தில் குளிர் தெரியாது.
தற்சமயம் மாதாந்திர மூலிகை
பயிற்சி முகாமிற்கு வந்த அனைவருக்கும் இந்த தைவேளேப் பூவின் பொரியல் செய்து கொடுத்து அனைவரும் சாபாபிட்டார்கள்.
பின்பு பயிற்சியின் போது அதை எவ்வாறு சமையல் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
தைவேளை வித்து
சிறிது வித்து எடுத்து லேசாக நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு வென்னீரில் கொடுக்க கிருமி வெளியேறும். வயிற்று வலி நீங்கும். சிற்றாமணக்கு எண்ணெயிலும் கொடுகாகலாம். இதன் வித்து வறுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சிறிது எலுமிச்சை பழச்சாறு விட்டு மைபோல் அரைத்து கட்டிகளில் பற்று போட பழுத்து உடையும்.,
தலைவலி சளி இருமல் காய்ச்சல் போக்கும் நல்லவேளை என்றழைக்கப்படும் தைவேளை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...