Saturday, November 17, 2018

இது கட்சி வேறுபாடு இல்லை, குடும்ப பிரச்சனை .

ஸ்டாலின், கனிமொழி இடையே கருத்து வேறுபாடு. கட்சி உடையும் அபாயம் ?
கஜா புயல் ஏற்பாடுகள் பாராட்டும் படி உள்ளது என்று ஸ்டாலின் கூறிய வேளையில், அது சரியில்லை என்று கனிமொழி கூறியுள்ளார். இது தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்திவிட்டது.
இது கட்சி வேறுபாடு இல்லை, குடும்ப பிரச்சனை என்று துரைமுருகன் கூறியுள்ளார் .
கழகம் ஒரு குடும்பம் என்பதால் இது கட்சி பிரச்சனை தான் என்று பொன்முடி கூறி மேலும் குழப்பிவிட்டார்.
தொலைகாட்சியில் இன்று விவாதத்தில் இதன் பின்னனியில் மோடி உள்ளாரா என்று அலசப்பட்டது. பிரசன்னா, சுந்தரவள்ளி, மயில்சாமி மற்றும் சுமந்த் சி ராமன் கலந்துகொண்டு மோடியே காரணம் என்று தீர்ப்பு வழங்கினர்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் சென்னை வந்து தங்கள் அணியில் இணையுமாறு வற்புறுத்த கனிமொழியிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர், ஸ்டாலினை விட கனிமொழி சிறந்தவர் என்று நாயுடு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...