Saturday, November 10, 2018

கூட்டணி அமைத்தது.

திமுக வும்
தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்தது.
-------------------------------
உபீஸ் :
இன்னிக்கு
என்ன சமையல்?
மனைவி :
வெண்பொங்கலும்
விரால்மீன் குழம்பும்.
உபீஸ் :
ஏண்டி,
பைத்தியக்காரி,
பைத்தியக்காரி
ஏதாவது அர்த்தம் இருக்கா?
பொங்கலுக்கு
மீன் குழம்பு எப்படிடீ சாப்பிடிறது?
மனைவி :
அவசரப்படாதீங்க,
காலையிலே பொங்கலுக்கு சாம்பார், சட்னி.
மத்தியான சோத்துக்கு
மீன் குழம்பு.
உபீஸ் :
அதானே பார்த்தேன்.
கொஞ்ச நேரத்துல
என்னைய கிறுக்க னாக்கிட்டியே?
மனைவி :
நீங்க எப்பவுமே கிறுக்கன் தானே,
அதிலே என்ன சந்தேகம்?
உபீஸ் :
என்னடி சொல்றே?
மனைவி :
சந்திரபாபு நாயுடுவும்
உங்க தலைவர் ஸ்டாலினும்
கூட்டணி வச்சா
கை தட்டி விசிலடிக்கிறீங்களே?
உபீஸ் :
அறிவு கெட்டவளே
அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்.
அவருக்கு ஆந்திராவுல செல்வாக்கு,
எங்க தளபதிக்கு தமிழ் நாட்லே செல்வாக்கு.
மனைவி:
அதத்தானே,
நானும் சொன்னேன்.
வெண்பொங்கலும்
விரால்மீன் குழம்பும் ன்னு!
காலையிலே இதுக்கு இது
மத்தியானம் அதுக்கு அது ன்னு!
உபீஸ் :
அடியேய்,
இன்னிக்கு பட்டினி கெடந்தாலும் பரவாயில்லை,
சாப்பாடு வேணாம்
சட்னியும் வேணாம்.
மனைவி :
பாத்தீங்களா பாத்தீங்களா,
நீங்களும் உங்க தலைவர் மாதிரியே ஆயிட்டீங்களே?
சட்னி பொங்கலுக்கு
சாப்பாட்டுக்கு மீன் குழம்பு ன்னு சொன்னேனில்லே?
உபீஸ் :
நாந்தான் எதுவும் வேணாம் ன்னு சொன்னேன் இல்லே,
இப்படியெல்லாம் பேசுனா
வீட்ட விட்டே கெளம்பிடுவேன், ஜாக்கிரதை.
மனைவி :
ஒரு வேளை சாப்பாட்டோட கூட்டணிய மாத்தி சொன்ன இவ்வளவு ரோஷம் வருதே?
அஞ்சு வருஷத்துக்கு ஆட்சி செய்றவங்க இஷ்டத்துக்கு கூட்டணி வைக்கிறாங்க,
அவங்களை தலைவரா ஏத்துக்கிட்டு
கொடி பிடிச்சு கோஷம் போடுறப்ப இந்த புத்தி எங்கே போகுமோ?
எப்பிடியாவது போயி தொலைங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...