Saturday, November 10, 2018

இது உண்மையா?


விஜய் படமோ, முருகதாஸ் படமோ இல்லை. மாறன் பிரதர்ஸ் அவங்களோட அரசியல் பிரவேசத்தை காட்ட எடுக்கப்பட்ட படம்.
திமுகவை கைப்பற்றும் எண்ணம் மாறன் சகோக்களுக்கு என்றுமே உண்டு. குறிப்பாக தயாநிதிமாறனுடன் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உரசலில் தயாநிதிமாறனையும் அவரது மொத்த குடும்பத்தையும் கட்சியில் இருந்து கருணாநிதி ஒதுக்கி வைத்ததில் இருந்து. தமிழகத்தை பொறுத்தவரை ஊடக பலமென்பது சன் குழுமத்திற்கு மட்டுமே பொருந்தும். அத்தகைய பலத்தை திமுக இயக்கத்திற்கு காண்பிக்கவே இந்த படம்.
விஜயின் அரசியல் வளர்ச்சிக்காக கலைஞரின் பேரன்கள் நடத்தும் சன் குழுமம் ஏன் மெனக்கெட வேண்டும் என்ற லாஜிக்கை யோசித்தாலே போதும் இதற்கான பதிலை தெரிந்து கொள்ள முடியும்.
கதை திருட்டு, முருகதாஸ் மீது வழக்கு பின்பு சுமூகமாக நடைபெற்ற செட்டில்மென்ட் எல்லாம் பக்கா கருணாநிதி டச். இது தான் அரசியலுக்கு தேவை. நான் திமுக மீது கடுமையான எதிர்ப்பு கொண்டவனாக இருந்த போதிலும் மாறன் சகோக்கள் சாமர்த்தியத்தை கண்டு பல முறை வியந்துள்ளேன். ஒன்று இரண்டு இல்லை தங்கள் மீது இருந்த அணைத்து வழக்குகளையும் உடைத்து தவிடு பொடி ஆக்கிய சாமர்த்தியம். இத்தனைக்கும் 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. முக்கியமான தீர்ப்புகளான 2g, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தீர்ப்பின் போது கூட்டு களவாணி காங்கிரஸ் கூட மத்தியில் ஆட்சியில் இல்லை. இருப்பினும் வழக்குகள் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக முடிந்தது. இது தான் சாணக்கியம், சாமர்த்தியம். இது இரண்டும் ஸ்டாலின் கிட்ட கொஞ்சமும் இல்லை ஆனால் பதவி ஆசை மட்டும் உள்ளது. மாறன் சகோக்கள், கனிமொழி, அஞ்சாநெஞ்சன், ஆகியோரை அரவணைத்து கட்சி நடத்தினால் மட்டுமே திமுக மீண்டும் உதயம் ஆகும். ஆனால் இவர்களை உள்ளே விட்டால் தனக்கே ஆபத்து என்று சுடலைக்கு தெரியும்.
படம் முழுக்க முழுக்க அதிமுக எதிர்ப்பு என்று திமுக உடன் பிறப்புகளும், தாறுமாறு என்று விஜய் ரசிகர்களும் காமடி செய்து வரும் நேரத்தில், இருவருக்குமே சொருக ஆப்பு கட்டையை சீவியுள்ளார்கள் மாறன் சகோக்கள். கருணாநிதியின் "ஜீன்" தனது பேரன்களிடம் நன்றாகவே தெரிகிறது. இவர்களால் மட்டுமே திமுகவை மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற முடியும்.
விஜய்யை பலி கடாவாக மாற்றி தங்களின் பலத்தை திமுக தலைமைக்கு காண்பித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...