Sunday, August 13, 2017

புதுக் காலை..

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்..
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம்..
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன்பாக மூன்று கேள்விகளைக் கேட்பேன்..
மூன்று கேள்விக்கும், "ஆம்" என்ற பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றிப் பேசலாம்.." என்றார்..
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்..
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி பேசுகிறீர்களா..?"
என்று கேட்டார்..
நண்பர் இல்லை என பதில் சொன்னார்..
"அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறீர்களா..?"
என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார் சாக்ரட்டீஸ்..
அதற்கும் இல்லை என பதில் சொன்னார் நண்பர்..
"அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா..??"
என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார் சாக்ரட்டீஸ்..
மீண்டும் இல்லை என்றே பதில் வந்தது..
"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்"
என்றார் சாக்ரட்டீஸ்..
#நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்..
இனிய நாளாகட்டும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...