Tuesday, August 22, 2017

தினகரனிடம்_தொண்டன்_கேட்கும்_கேள்வி ?

 உங்கள் சின்னம்மா படம்போட்ட காலண்ட ரையே மாட்ட மறுக்கும் தொண்டன் தொன்டனின் ஆசை என்று எதைவைத்து சொல்கிறீர்கள்......
R.K.நகரில் உங்கள் சின்னம்மா படத்தை மறைத்து விட்டுத்தானே ஓட்டு கேட்டீர்கள்! 
கட்சி ஒன்றுசேர்வதே எனது குறிக்கோள் என்று சொன்னீர்களே...

Image may contain: 1 person, smiling, closeup
கட்சி சேர்வதற்கு 60 நாட்கள் அவகாசம் தருவதாக வும் அதற்குள் சேரவில்லை என்றால் நான் சேர்த்து வைப்பேன் என்று சத்தியம் செய்து கூறினீர்களே. ஆனால் இப்போது இரண்டு ஒன்று சேர்ந்தால்
பதறுகிறீர்களே ஏன்! இதில் விரக்தியான நீங்கள் பதட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு உளறிகொட்டாமல் இருப்பதற்காக
ஊடகத்தை சந்திக்க மறுத்து ஜூரம்...தொண்டை புண் என்று பொய்கூறி பேச மறுத்துவிட்டீர்கள்.மதுரை மேலூரில் கூட்டிய கூட்டத்தை காட்டிலும் பெரிய அளவில் சென்னை RK நகரில் 23ஆம் தேதி நடத்தி க்காட்ட திட்டமிட்டு இருந்த கூட்டத்தையும் அதையடுத்து தேனியில் கூட்டவிருந்த கூட்டத்தையும் அதே பதற்றத்தோடு ரத்து செய்து விட்டீர்களே ஏன்???.
மக்கள் யார்பின்னால் இருக்கிறார்கள் என்பது தேர்தல் வந்தால் தெரியும்!
அம்மா உங்களை 20 ஆண்டுகளுக்கும் முன்னாலேயே கட்சியிலிருந்து நீக்கி வைத்தார்களே அம்மா இறந்தபிறகு ஒரே நாளில் கட்சியில் சேர்ந்து து.பொ.செயலாளர் ஆனீர்களே...அது அம்மா வின் ஆசையா!
சின்னம்மா வின் பேராசையா!
திவாகரன் எப்போது கட்சிக்குள் வந்தார் கட்சிக்கு கட்டளைகளை இட்டுக்கொண்டுஇருக்கிறார்! பொதுசெயலாளரே செல்லாது என்று கூறும்போது து.பொதுசெயலாளர் எங்கிருந்து வந்தார்! உங்கள் சொல்படியே வைத்துக்கொள்ளுங்கள் அதிகபடியானM.L.A மற்றும் தொண்டர்கள் உள்ள அதிமுக , 19 பேரைவைத்துக்கொண்டு நான்தான் அதிகாரம் செலுத்துவேன் என்றால் எந்தவிதத்தில் நியாயம் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சின்னமா படத்தை எடுத்துக்கொண்டு எந்த ஒரு அதிமுக தொண்டன் வீட்டிலாவது நுழையமுடியுமா ???
சின்னமாவுக்கே அந்தநிலைமை என்கிற போது உங்கள் நிலமை!!! என்னமோ செய்யுங்கள் !!!
சசிகலாவும் உஙகள் குடும்பமும் அம்மாவுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டே அம்மாவின் பெயறை முறை கேடாக பயன்படுத்தி பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டீர்கள்.
அம்மாவை சிறைக்கு அனுப்பி பாதி உயிரை எடுத்தீர்கள்.
வெறும் காய்ச்சல் என அப்போலோவில் கொண்டு போய் போட்டு மீதி உயிரை யும் எடுத்து கொன்று புதைத்தீர்கள்.
ஆனால் தொண்டர்கள் என்பின்னால் இருக்கிறார்கள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள் ...
தமிழக மக்கள் உங்களின் கணக்கைத் தீர்க்க கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...