Sunday, August 13, 2017

கோகுலாஷ்டமி பண்டிகையை...இப்படித்தான் கொண்டாடுவார்கள்!

கோகுலாஷ்டமி நாளில், இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீகண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிசிக் கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்வார்கள். இதன் அர்த்தம்… ஸ்ரீகண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து ஆடி அசைந்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பது தாத்பர்யம்!
பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.
வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீகிருஷ்ண சரிதம் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜயந்தி பூஜையையும் வழிபாட்டையும் மேற்கொள்வார்கள்.
வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு, அருகே உள்ள ஸ்ரீகண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வார்கள் பக்தர்கள்!
கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைந்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள். இது காணக் கிடைக்காத கண் கொள்ளாத காட்சி என்று சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்!Image may contain: 1 person, food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...