சமீபத்தில், தனியார், 'டிவி' நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலர், நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அவரிடம், 'டிவி' நெறியாளர், 'நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை, தமிழருவி மணியன் ஆதரித்து பேசுகிறாரே...' என, கேள்வி கேட்டார்.அதற்கு, நாஞ்சில் சம்பத், 'தமிழருவி மணியன், காசு கொடுத்தால் யாரையும் ஆதரிப்பார்; அவரின் அரசியல் பிழைப்பே, இப்படி பேசினால் தான் நடக்கும்' எனக் கூறினார். உண்மையில், பேச்சை வைத்து யார் பிழைப்பு நடத்துகிறார் என்பது, சம்பத்துக்கு நன்கு தெரியும்.தமிழருவி மணியன் குறித்து, அவர் பேசுவது, 'சூரியனை பார்த்து நாய் குரைத்த கதை'யை நினைவுப் படுத்துகிறது. கருணாநிதி ஆட்சியில், தனக்கு அளித்த திட்டக் குழு துணைத் தலைவர் பதவியை, 'தேவையில்லை' என உதறி வந்த நேர்மையானவர், தமிழருவி மணியன்.அவர் உடுத்தும் சட்டையை போன்றே, வெள்ளை உள்ளமும், கறை படாத கரங்களும் கொண்டவர். தமிழகத்தில், ஒன்றிரண்டு தன்னலமில்லாத அரசியல்வாதிகள் நடமாடுகின்றனர். அதுவும், நாஞ்சில் சம்பத்துக்கு பொறுக்கவில்லை போலும்!நாஞ்சில் சம்பத்துக்கு வேண்டுமானால், தியாகத் தலைவியாக சசிகலாவும், தியாக செம்மலாக தினகரனும் தெரியட்டும். அதற்காக, தமிழருவி மணியன் போன்றோரை, இனியும் இகழ்ந்து பேசாதீர்!'ரஜினி படத்தை பார்த்து லட்சம் பேர் மது குடிக்கின்றனர்' என, வாதம் செய்கிறார், நாஞ்சில் சம்பத். உங்கள் தியாக தலைவியிடம் சொல்லி, அவர் நடத்தும், 'மிடாஸ்' சாராய ஆலையை மூடலாமே...அப்படி செய்தால், லட்சம் இளைஞர்கள் குடிக்காமல் இருப்பரே... இதை எல்லாம் பேசினால், சம்பத்தே... உங்கள் பிழைப்பு நடக்காதே! உங்களின், எதுகை மோனை பேச்சு நடையில் சொல்வது என்றால், 'பூக்கடையை பற்றி சாக்கடை பேசலாமா...!'தமிழர்கள் யாரும், 'இன்னோவா' கார் கதை தெரியாத இளிச்சவாயர் அல்ல. இனிமேலாவது கொடுக்கும் காசுக்கு மட்டும் கூவுங்கள், மிஸ்டர் சம்பத்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment