Sunday, August 20, 2017

சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி.

இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.
 சிதறும்,துதிபாடிகள்,தினகரன்,அதிர்ச்சி
சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார்.

நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளாக, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,எம்.எல்.ஏ.,க் களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேலுாரில், அரசுநடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, நேற்று நடந் தது. இதில், தினகரன் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பறிபோகிறது தினகரன் ஆதரவு மந்திரிகளின் பதவி

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் இன்று மாலை இணையவுள்ளன. அப்போது ஒற்று மைக்கான உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது. கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழி காட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இடம் பெற உள்ளனர். 

பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம்பெறுகின்ற னர்.முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது. பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக் களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர்மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக் களை மாற்றவும் முடிவாகி உள்ளது.

இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும், எம்.எல்.ஏ.,க் களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரிய தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.நீண்ட இழு பறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன் ஆதரவாளர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். -  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...