Sunday, August 20, 2017

தள்ளாடும் பாரத வங்கி.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கித்தொகையில், 27 சதவீத தொகை நாட்டின் உச்சத்திலுள்ள பெருந்தொகை கடன்பெருபவர்களால் பெறப்பட்டு,அவர்களால் திருப்பி செலுத்த வழியிருந்தும் கடனை கட்டாமல் இழுத்தடிக்கிறார்களென PTI தெரிவிக்கிறது ! (Top loan defaulters owe 27% of total amount to SBI alone )
திருப்பி செலுத்த வழியிருந்தும் தெரிந்தே வாங்கிய கடனை கட்டாமல் இழுத்தடிப்பது அல்லது கடன் நிலுவையிலிருக்கும்போது தனது சொத்தை வங்கிக்கு தெரியாமல் வித்து சுருட்டும் வேலைக்கு wilful default
என்று பெயர்!
இந்த wilful defaulters 1762 பேர் SBI யில் பெற்றுள்ள கடன்தொகை மட்டும் 25,104 கோடி! இது மொத்த SBI பணத்தில் 27 சதவீதம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியின்wilful defaulters 1120 பேர்! பெற்றகடன் தொகை 12278 கோடி! இந்த இரண்டு வங்கிகளின் wilful defaulters மொத்த கடன் தொகை 37382 கோடி! இது இந்த இரண்டு வங்கியும் கொடுத்த மொத்த கடன் தொகையில் 40%!
2016-17,-ல் SBI மற்றும் அதனுடைய ஐந்து அசோசியேட் வங்கிகளும் சேர்ந்து தள்ளுபடி செய்த மொத்த கடன் தொகை
Rs 81,683 கோடி ஆகும்!
Non performing assets என்று சொல்லக்கூடிய செயல்படாத வங்கி சொத்துக்களின் மதிப்பு(கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன்) மார்ச் 2017 முடிய
₹ 6.41 லட்சம் கோடி !
இந்த நிலையில் SBI தன்னை காப்பாற்றிக்கொள்ள தள்ளாடுகிறது ! மீண்டும் 2016-2017 போல் ஓர் தள்ளுபடி பாயாசம்போட SBI முயலும் பட்சத்தில் அரசும் ஒத்துழைக்கும்!
கல்விக்கடனும் விவசாயி டிராக்டர் கடனும் SBI பிடரியில் அடித்து வாங்கும்!
வலிமையான பாரதமா? வலிமை உள்ளவனுக்கு பாரதமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...