Tuesday, August 29, 2017

பிறந்த கிழமையை வைத்து, அவர்களுக்கு உள்ள குணநலன்கள்.

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து, அவர்களுக்கு உள்ள குணநலன்கள் மற்றும் திறமைகளை கூறிவிடலாம்.🌹
ஞாயிறு🌹🌿
ஞாயிற்றுகிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிக எளிதாகவும், திறமையாகவும் செய்து முடித்து சாதனைப் படைப்பார்கள்.
இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்யும் உணர்ச்சிமிக்க, உதவும் குணம் கொண்டவர்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
திங்கள்🌹🌿
திங்கள்கிழமையில் பிறந்தவர்கள், அனைவரும் விரும்பும் வகையில் அமைதியான மனம் படைத்தவர்களாகவும், உதவும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதால், எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள்.
ஆனால் தர்மம், நியாயங்களைக் கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர்கள், நல்ல கற்பனைவளம் கொண்டவர்கள், இவர்களுக்கு சொந்தத் தொழிலே கைக்கொடுக்கும்.
செவ்வாய்🌹🌿
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்கிற மனப்போக்கு கொண்டவர்கள்.
இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் திகழ்வார்கள், அதனால் பலருக்கும் இவரை பிடிக்காது, நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
புதன்🌹🌿
புதன்கிழமையில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பார்கள். இந்த ரகசிய திறமை இவர்களுக்கு மட்டும்தான் உரியது.
இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
வியாழன்🌹🌿
வியாழன்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவார்கள்.
இவர்கள் உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றம் அடைவார்கள்.
வெள்ளி🌹🌿
வெள்ளிகிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடையப் பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார்கள்.
சனி🌹🌿
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அந்த வேலையை முடித்தப் பிறகே அடுத்த வேலையைச் செய்யத் துவங்குவார்கள்.
இவர்கள் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தியுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...