Thursday, August 31, 2017

தைரியம் இருக்கிறதா தினகரனுக்கு...

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார்களெனில் பதவியை மட்டும் ஏன் பறிக்கிறார்...
எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமல்ல எவரையுமே கட்சி யை விட்டு நீக்க துணிவில்லை.
தினகரனுக்கு அரசியல் தெளிவில்லை என்பது இதிலிருந்தும் தெரிகிறது.
ஆளுநரிடம் போய் ஆட்சியை கலைக்க சொல்லி நாங்கள் கேட்கவில்லை.ஆட்சி மீது நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் மீது மட்டுமே நம்பிக்கை இல்லை. வேறு முதல்வரை மாற்றுங்கள் என்று கடிதம் கொடுப்பது எவ்வளவு பெரிய அரசியல் அறியாமை...???
ஒரு முதல்வரை மாற்றி வேறு முதல்வரை நியமிக்க ஆளுநர் என்ன அநிமுக கட்சி தலைவரா???.
தினகரனுக்கு ஆற்றல் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை நான் நீக்குகிறேன். அவருக்கு பதிலாக தனபாலை முதல்வராக நியமிக்கிறேன் என தினகரன் கையொப்பம் இட்டு ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வேண்டியதுதானே? அல்லது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோரை சின்னம்மா வின் அனுமதியோடு நீக்குவதாக அறிவித்தது போல தமிழக அமைச்சர்கள் அனைவரையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டியதுதானே...
இதற்கு தைரியம் இருக்கிறதா தினகரனுக்கு...
இல்லை அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு அதோ வரூகிறேன் இதோ வருகிறேன்... 5ஆம் தேதி வருகிறேன்... 10 ஆம் தேதி வருகிறேன் என கதை யளந்து பயந்து காலம் கடத்தியது போல் இருக்க போகிறாரா..???
அது தினகரனுக்கே தெரியாது...
காலம் விரைவில் பதில் சொல்லும்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...