Thursday, August 24, 2017

சசி சொத்து முடக்கம்: அரசு அடுத்த 'மூவ்'.

அடுத்த கட்டமாக, நீதிமன்றம் விதித்த, அபராத தொகைக்கு ஈடாக, சசிகலாவின் சொத்துகளை முடக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்த போது, வருமானத் திற்கு அதிகமாக, சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குதலா, நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ., இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான வழக்கை, உச்ச நீதி மன்றம் கைவிட்டது.மற்ற மூவருக்குமான தண்டனையை உறுதிசெய்தது. அபராத தொகையை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை செயல்படுத்துவதற்காக, சசிகலா உள்ளிட்ட மூன்று பேரின் சொத்துகளை, தமிழக அரசு அடை யாளம் கண்டுள்ளது. ஆனால், இன்னமும் கையகப் படுத்தப்படவில்லை.தற்போது, சசிகலா குடும்பத் திற்கும், முதல்வர் பழனிசாமி தரப்பினருக்கும் இடையே, உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது.

தினகரன், தன் ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு வரு கிறார். அதை முறியடிக்க, அரசு தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


சசிகலா குடும்பத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, 'ஜெ., வசித்த போயஸ் கார்டன் இல்லம், நினை விடமாக்கப்படும்' என, அரசு அறிவித்தது. ஏனெ னில் இந்த வீடு, சசிகலா குடும்பத்தினர் கட்டுப் பாட்டில் இருந்தது.அடுத்த கட்டமாக, நீதிமன் றம் விதித்த, அபராதத் தொகையை வசூலிக்க, சசிகலா உட்பட, மூவரின் சொத்துகளை பறி முதல் செய்யவும், திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...