Wednesday, August 23, 2017

'பஞ்ச பத்ர பாத்திரம்'

*பஞ்ச பத்ர பாத்திரம்'* *பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை இங்கே:- * *இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.*
*அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.*
*அதாவது ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.*
*துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள்.*
*இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'.*
*இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.*
*இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.* *இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.*
*சிவபெருமானுக்கு உகந்தத இலை வில்வம்,*
*திருமாலுக்கு உகந்தது துளசி,*
*அம்மனுக்கு வேப்பிலை,*
*விநாயகருக்கு அருகம் புல்,*
*பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.*
*பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில் விளக்கம்*
*•பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்*
*பயன்பாடு*
*பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் இருக்கும் நீரில் ஒன்றைத்தான் நமக்குத் தருகிறார்கள்.*
*அதென்ன பஞ்ச பாத்திரங்கள்?*
*அர்க்கயம் - கைகளுக்கு,* *பாத்யம் - பாதங்களுக்கு,* *ஆசமனீயம் - இது ஆசமனம்*, *ஸ்நானீயம் - திருமேனிக்கு,* *சர்வார்த்த தோயம் - மற்ற அனைத்துக்கும்.* *இவை தான் பஞ்ச பாத்திரங்கள்!*
*இவை இல்லாமல் தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரம், தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்து தான் இந்த பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!*
*நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம், சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து. அது தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும்!*
*மற்ற அனைத்தின் நீரும் இந்த ஐந்தாவதில் இருந்து தான் போயும், வரவும் செய்யும்!*
*தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:*
*பச்சைக் கர்ப்பூரம்,ஏலக்காய், இலவங்கம்,ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.*
*பஞ்சமுகம்:-இங்கு பஞ்சமுகம் என்பதற்கு அர்த்தமே வேறு*
*வியாகரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.*
*முகம் மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்று பெயர்.*
*அதேபோல் பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை பஞ்சபாத்திரம் என்று குறிப்பிடுகிறோம்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...