Tuesday, August 22, 2017

தினகரன் ஆதரவாளர்கள் மகா புத்திசாலிகள்.

சட்டசபைக் கூடி
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநா் உத்தரவிட்டால் எடப்பாடி அரசு தாக்குப்பிடிக்குமா?
ஓர் அலசல்
தினகரன் ஆதரவாளர்கள் மகா புத்திசாலிகள்
அரசைக் கவிழ்க்க விரும்பவில்லை , ஆனால் முதலமைச்சரை மாற்றுங்கள் என 19 எம்எல்ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து கோரினர் .
ஆனால் ஆளுநரோ ,ஆட்சியை கலைக்கத்தான் எனக்கு உரிமையுள்ளது . முதல்வரை ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களான நீங்கள் தான் ஒன்றுகூடி முடிவு செய்யவேண்டும் . என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி அனுப்பி வைத்தாராம்
இந்த 19 எம்எல்ஏக்களைக்
கொண்டு ஆட்சியைக் கலைக்க முடியுமா ?
தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியின் 134 எம்எல்ஏக்களில் மைனஸ் இந்த 19 எம்எல்ஏக்கள் என்றால் அதாவது (134-19=) 115/234 என வரும் .
அதாவது பெரும்பான்மைக்குக் குறைந்தபட்சத் தேவையான 117 எம்எல்ஏக்கள் இல்லை என்கிறார்கள் பொதுவானவர்களும் மீடியாக்களும் .
சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தினகரனின் 19 எம்எல்ஏக்களான இவர்களோ அல்லது எதிர்கட்சியான திமுகவோ கொண்டு வந்தால் ஓட்டெடுப்பின் போது ,அந்த 19 பேரும் அஇஅதிமுக சட்டமன்றக் கட்சிக் கொறடாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும் .
அதை மீறி இந்த 19 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட்டால் அவர்கள் தங்களது எம்எல்ஏ தகுதியை இழப்பார்கள் .
( தேர்தல் வந்தால் மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதும் அவா்களுக்கு நன்கு தெரியும் )
சபையில் இரகசிய வாக்கெடுப்பு இல்லை என்பது ஏற்கெனவே பன்னீரின் விஷயத்தில் நடந்தது தான் .
சபை கூடினால் சபாநாயகர் அவையின் ஒவ்வொரு பகுதியாகக் கூப்பிடும்போது எழுந்து நின்று கணக்கு எடுக்கப்படும் , ஆதரவு உண்டு இல்லை என காட்ட
வேண்டும் .
'கட்சிக் கொறடா' உத்தரவை மீறி எழுந்து நிற்காமலோ அல்லது ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்து நழுவினாலோ தீர்மானம் கொண்டு வந்த அன்று சபையில் கூடியுள்ள உறுப்பினர் எண்ணிக்கையில்
அதாவது (EFFECTIVE STRENGTH OF THE HOUSE) என்ற நிலையில்
மொத்தம் 234 எம்எல்ஏக்கள்
இதில்
ஜெயலலிதா (மறைவு) 1:
கருணாநிதி (ஜனாதிபதி தேர்தலிலேயே உடல்நிலை கருதி வாக்களிக்கவில்லை) :- 1
மேற்படி தகுதி இழப்பு அல்லது வெளிநடப்பு: 19 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஆக 234 எம்எல்ஏக்கள் மைனஸ் 21எம்எல்ஏ= 213 எம்எல்ஏக்கள்தான் . அதில் இப்போது ஆளும் கட்சிக்கான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு என்பது மிக அதிகமான பெரும்பான்மையாகி விடும் .
அந்த 19 எம்எல்ஏக்களை எப்படித் தகுதி நீக்கம் செய்வது என்பதை சபாநாயகரின் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்த சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பி எச் பாண்டியன் தற்போதைய சபாநாயகர் தனபாலுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டுவார் .
எடப்பாடி அவா்கள்
தலைமையிலான அம்மா அவா்களின்
இந்த அரசு பன்னீா் அவா்களின் மேற்பார்வையில் ,
மோடி அவா்களின் வழிகாட்டும் திட்டங்களுடன் நல்ல சௌகா்யமான பெரும்பான்மையிலேயே அடுத்த மூன்றரை ஆண்டுகளையும் தடையின்றி கடந்து விடும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...