Saturday, November 18, 2017

*ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்*

காமம்: தனம், தான்யம், தாரம், தன் பிள்ளை, பேரன்கள் மீதுள்ள அளவிலா ஆசை
குரோதம்: மற்றவருக்கு தீமை விளைவிக்க முற்படுவது.
லோபம்: மற்றவருக்கு ஈயாதவனின் இயல்பு
யோகம்: மனைவி மக்கள் மீது அதிக பாசம் வைத்து அதிக செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது.
மதம்: மற்றவர்களை துச்சமாக நினைத்து கர்வத்துடன் செயல்படுவது.
மாச்சர்யம்: மற்றவர் நன்கு வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல்.
டம்பம்: நான்கு பேர் மெச்சுவதற்காகவே நல்ல காரியம் செய்தல்
தர்ப்பம்: செல்வம், செல்வாக்கு - இவற்றில் தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வம் கொள்ளல்
ஈர்ஷை: தனக்கு நேர்ந்த கஷ்டமும், துக்கமும், பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைப்பது
அசூயை: தீமை செய்வோருக்கு, பதிலுக்கு, தீமை செய்ய விரும்புவது.
இந்த பத்து அழுக்குகளும், நீரை மூடியுள்ள பாசி போல, ஆத்மாவை மறைக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...