Thursday, November 30, 2017

திருக்கார்த்திகை #தீபம் #வரலாறு:-

பரந்தாமனால் திருமாலும்,பிரம்மாவுக்கும் இடையே
முதன்மை பெற்ற பெரியவர் யார் என்பது குறித்துக் கடுமையான போட்டி உருவானபோது,

சிவபெருமான் அவர்கள் இருவருக்கும் பாடம் புகட்ட எண்ணினார்.
இருவரில்
யார் தம் அடியையோ,முடியையோ காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறி அடிமுடி காணாதவாறு தேவபிரான்,
ஜோதிப்பிழம்பாகக் காட்சி அளித்தார்.
திருமால் வராக அவதாரம் எடுத்துச் சிவனின் அடி காண இயலாமல்
தம் தோல்வியை ஏற்று திருவண்ணாமலை அடைந்தார்.
பிரம்மாஅன்னப்பறவை உருக்கொண்டு ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தார்.
அப்போது,விண்ணிலிருந்து பூமியை நோக்கித் தாழம்பூ ஒன்று இறங்கி வந்தது.
அதைக் கண்ட பிரம்மா
"தாழம்பூவே நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்க கங்கை நீர் மல்கும் திங்களார் (சிவன்)சடையினின்று நழுவிய நான்,
கடந்த 40 ஆயிரம் ஆண்டு காலமாக
கீழ் நோக்கி வந்து
கொண்டிருப்பதாகவும்,
பிரம்மதேவர் மட்டுமல்லாது எவராலும் ஈசனின் திருமுடியினை ஒரு போதும் காண இயலாது என்று கூறிவிட்டது.
இதனால் அதிர்ந்தபிரம்மா
தாழம்பூவை சரிக்கட்டி சிவனின் முடியைப் பிரம்மா கண்டுவிட்டதாகப் பொய்சாட்சி கூறவைத்தார்.
No automatic alt text available.
எனவே,
தம்முடியைக் காணாமலே கண்டதாகப் பொய் கூறிய படைத்தல் கடவுள் மீது கடுஞ்சினம் கொண்டு,
பொய்யுரை கூறியதால்,
"பூமியில் எங்கும் பிரம்மாவிற்கு ஆலயம் கூடாது" என்று சபித்தார்.
பொய்ச் சாட்சி கூறியமையால்
தாழை மடல் இனி ஒரு போதும்
தம் வழிபாட்டுக்கு ஏற்ற மலர்,அன்று என்று கூறிவிட்டார்.
காத்தல் கடவுள்திருமால்,
சிவனிடம்,இறைத்தன்மையைக் காத்து உண்மை கூறியதால்,
"பூலோகம் முழுவதும் திரு உருவ வழிபாட்டுடன் ஆலயம் கொண்டு அடியவரைக்காக்கும் பணியைப்புரிவீராக"என்று கூறினார்.
பிரம்மனும்,திருமாலும்
தங்கள் அகந்தை இருள் அகன்று,
சிவனிடம் வேண்ட அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி
சிவலிங்கத் திருமேனி கொண்டு
தீபத் திருநாளில் சுயம்புவாக எழுந்தருளினார்.
தீப பிழம்பாகச் சோதி வடிவாக அருணாச்சலம் அமர்ந்த ஈசன் காட்சியளித்த நன்னாளே
கார்த்திகை மாதம் பத்தாம் நாள் மகாதீபப் பெருவிழாவாக மலர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் பயிர் விளைச்சல் அதிகம் இருக்கும்.
அதனால் பூச்சிகள் அதிகம் வரும்
எனவே தீபம் ஏற்றுவதால்
பூச்சி இனமானது அழிந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
அனைவருக்கும்
திருக்கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.Image may contain: people standing, sky and outdoor
அக்ஞானம் அதாவது ஞானமற்றிருக்கும் நிலை இருள் தான். அந்த நிலையில் அகந்தை அல்லது ஆணவம் இருக்கும். மாற்றிச் சொன்னால், அகந்தை இருப்பவர் அக்ஞானி ஆவார். ப்ரும்மாவிடமோ திருமாலிடமோ அகந்தை உண்டாகவே உண்டாகாது. உணர்த்தப்படும் கருத்து என்னவெனில், நம் போன்றோர்கள் பரம்பொருள் கோட்பாட்டைச் சரியாக அறிந்து இறையுருவங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதே. ஒரே பரம்பொருளே தான் தேவைக்கேற்பப் பல்வேறு உருவங்களாக ஆகி தங்கள் மேன்மைமிகு பணிகளைப் புரிவர். வடிவங்களுக்குப் பொருத்தமாக சிலப் பெயர்கள் கொள்வர். உற்சவர் மூலவர் வடிவங்களில் வேறுபடுவதனால் தத்துவத்தில் வேறா? இல்லையே. அதுபோல் தான். இறைதத்துவம் சரியாக அறியப்பட்டு தன்னையும் சுமந்து ஆளும் ஆன்மாவும் அதுதான் என்பது அனுபவத்திலும் வர வேண்டும். பேராசை, பொறாமை, கபடு சூது, வஞ்சனை, சினம், இன்னாச்சொல் மற்றும் மன நிறைவின்மை இவைகளெல்லாம் அகந்தை ஒன்றினாலே ஏற்பட்டு உள்ளமாகிய திருக்கருவறையை இருளடையச் செய்துள்ளது. இறைவனுடைய இடமாயிற்றே? திருக்கார்த்திகை தீப ஒளி அதாவது ஶ்ரீ அருணாசலேஸ்வர ஞான ஒளி மட்டும் தான் அந்த இருளைப் போக்கடிக்கவல்லது. ப்ரார்த்தித்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...