Saturday, November 18, 2017

தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர்.

‘இசையரசி’ என அழைக்கப்படும் பி. சுசீலா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று விளங்கும் பி. சுசீலாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
Image may contain: 1 person, smiling, closeup பிறப்பு: நவம்பர் இடம்: விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம் மாநிலம், இந்தியா பணி: திரைப்பட பின்னணிப் பாடகி நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு “புலப்பாக்க சுசீலா” என்னும் இயற்பெயர்கொண்ட பி. சுசீலா அவர்கள், 1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள “விஜயநகரம்” என்ற இடத்தில், தந்தையார் ‘புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம்’, என்பவருக்கும், தாயார் ‘ஷேசாவதாரம்’ என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு வக்கீலாக பணியாற்றி வந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தன்னுடைய சொந்த ஊரிலியே பள்ளிப்படிப்பை முடித்த அவர், படிக்கும் பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய ‘துவாரம் வேங்கடசாமி நாயுடுவிடம்’ முறையாக இசைப் பயின்றுவந்தார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’ சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற அவர் பின்னர், ‘ஆந்திரா பல்கலைக்கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில் ‘டிப்ளமோ’ முடித்தார். இசைப்பயணம் இளம்வயதிலேயே குறுகியகாலத்திற்குள் பாரம்பரிய இசையில் தேர்ச்சிப்பெற்றவராக விளங்கிய அவர், ஆரம்பத்தில் சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குனர் ‘கே.எஸ் பிரகாஷ்ராவ்’ அவர்கள், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பின்னணிக் குரல் பாட வைத்தார். 1953 ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ‘ஏ.எம் ராஜாவுடன்’ இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்றப் பாடலைப்பாடினார். பிறகு ‘ஏ.வி.எம் ஸ்டுடியோவில்’ சிறிது காலம் பணியாற்றிய அவர், ‘லஷ்மிநாராயணம்’ என்பவரிடமிருந்து மேலும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. விருதுகளும் மரியாதைகளும் 2008 – மத்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.2001 – ஆந்திர மாநில அரசால் ‘ரகுபதி பெங்கையா விருது’.1969, 1971, 1976, 1982, 1983 என ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தேசிய விருதை’ வென்றுள்ளார்.1969, 1981, 1989 என மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தமிழ்நாடு மாநில அரசின் விருது’ மற்றும் 8 பிற மாநில விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...