Saturday, November 18, 2017

#மதுரம் - #மோக்ஷம்.

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்து தான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும் போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன.
பழம் நல்ல மதுரமாக இருக்கிறது, இந்த மதுரம் வருவதற்கு முன்பு எப்படியிருந்தது!
பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது.
மதுரம் என்பது தான் சாந்தம்.
சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய் விடுகிறது. பழத்தில் மதுரம் நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது.
அது போல இருதயத்தில் எல்லா இடத்திலும் மதுரம் வந்து விட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய் விடும்.
புளிப்பு இருக்கும் வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காம்பிலும் ஜலம் வரும்.
அதாவது மரமும் காயை விட்டு விட விரும்பவில்லை. காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால், நிறைந்த மதுரமாக ஆகி விட்டால் தானாகவே பற்றும் போய் விடும். பழம் தானே இற்று விழுந்து விடும்.
மரமும் பழத்தை விடுகிறது, பழமும் மரத்தை விடுகிறது. இரண்டும் ஜலம் விடாமல் அதாவது அழாமல் ஆனந்தமாகப் பிரியும்.
படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமான ஒவ்வொருவனும் இப்படியே ஆனந்தமாக சம்ஸார விருட்சத்திலிருந்து விடுபட்டு இருப்பான்.
புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும்.
ஆனாலும் அந்தந்த நிலையோடு நிற்காமல், பிஞ்சு அனவரதமும் பழமாகிக் கொண்டே இருப்பது போல் நாமும் மேலும் மேலும் மாதுரியமான அன்பை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாமாக மோக்ஷத்தைத் தேட வேண்டாம். தானாக மோக்ஷம் என்ற மதுர நிலை வந்து விடும். அவன் அருளில் அனுக்ரஹம் பெறுவோம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...