Wednesday, November 22, 2017

அம்மாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது”

#ஜெயலலிதா_அம்மையாரின்_உயிர்_எந்த_இடத்தில்_போனது_எப்போது_போனது.???..
#அவருக்கு_எப்போது_திதி_கொடுக்க_வேண்டும்...???
***************************************
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்திற்கு இன்று பகல் 11 மணிக்கு தினகரன் அடிவருடிகள் வருகை தந்தனர். சற்று நேரத்தில் டிடிவி தினகரன் அடியாட்கள் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், கலைராஜன் செந்தமிழன் ஆகியோர் அங்கு வந்தனர்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
காலை 11.15க்கு வெற்றிவேல் கூறுகையில், ‘மாதாமாதம் அம்மாவுக்கு செய்கிற பூஜையை ஐ.டி. ரெய்டை காரணம் காட்டி அரசு தடுக்கிறது. இதை அனுமதிக்க முடியாது’ என்றார்.
பகல் 11.30க்கு கலைராஜன் கூறுகையில், ‘நாங்கள் உள்ளே போகமாட்டோம். பூஜை செய்யும் பிராமணர்களை மட்டும் அனுமதியுங்கள்’ என்று கூறுகிறோம். அதற்கும் அனுமதிக்காவிட்டால் எப்படி?’ என கேள்வி எழுப்பினார்.
பகல் 11.35: பூஜை செய்கிறவர்களை உள்ளே அனுமதிக்காததால் தொண்டர்களுக்கும், போலீஸுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பகல் 12.00 : போலீஸ் கண்டிப்புடன் அனுமதி கொடுக்க மறுத்ததால், டிடிவி ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து படிப்படியாக கலைந்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், “போயஸ்கார்டனில் வருமான வரித்துறையினர் இரண்டு அறைகளுக்கு மட்டும் சீல் வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு திதி கொடுக்கக் கூட போலீசார்கள் அனுமதி அளிக்கவில்லை. திதி கொடுக்கச் சென்ற சாஸ்திரிகளை கூட போலீசார் தடுத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தான் கார்டனுக்குள் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேவையில்லாமல் கைதாக வேண்டாம் என அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். நான் சொன்னதால், அவர்கள் அந்த இடத்தை விட்டு வந்துவிட்டனர். அம்மாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” என்றார்.
★ இன்று 22-11-2017 ஆம் தேதி அவருக்கு திதி கொடுக்கிறோம் என்று.. கொள்ளைக் குற்றவாளி சசிகலா மற்றும் லஞ்ச குற்றவாளி திகார் தினகரனின் அடியாள் கூட்டம்
போயஸ்கார்டனில் நாடகம் ஆடியதின் நோக்கம் என்ன...???
★ சாதாரண காய்ச்சல் எனக்கூறி இவர்கள் அப்போலோவிற்கு கொண்டு போன அதே 22 ஆம் தேதியான இன்று திதி கொடுக்க இவர்கள் போயஸ்கார்டன் சென்றது ஏன்...???
★அப்படியானால் உயிர் பிரிந்த தேதி... 22-09-2016 ஆம் தேதி என்பதுதான் உண்மையா?
அல்லது 05-12-2016 ஆம் தேதியா.?
★ அவரது உயிர் போயஸ் கார்டனில் இருந்துதான் பிரிந்ததா..??? அல்லது அப்போலோவில் பிரிந்ததா..???
★ சசிகலா கொள்ளைக் குடும்பத்தினர் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களைக் களைய திதி கொடுக்க போகிறோம் என்கிற பெயரில் பரிகார பூஜை செய்ய போயஸ்கார்டன் சென்றார்களா...???
இப்படி பல சந்தேகங்கள் எழுகின்றன...???...!!!
#அவருக்கு_எப்போது_திதி_கொடுக்க_வேண்டும்...??? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...