Friday, November 17, 2017

இந்த கீரையின் இலைகளை நெய்யில் வதக்கி, துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால்.

இந்த கீரையின் இலைகளை நெய்யில் வதக்கி, துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால்

கீரைவகைகள் ஒவ்வொன்றிலும் எல்லையில்லா மருத்துவ பண்புகளையும், நோய் எதிர்ப்புச்
சக்தியை தரும் ஆற்றலும் நிறைந்துள்ள‍ன• ஆகவே கீரைக ளை புறந்தள்ளாமல் கீரை வகைகளை சமைத்து உண்டு வாழ் வர்களை நோய் எட்டி நின்றுதான் வேடிக்கை பார்க்குமே தவிர கிட்ட வந்து ஒட்டிக் கொள்ளாது. உதாரணமாக இந்த மூட்டு வலியினால் இன்றைய காலக்கட்ட‍த்தில் பெரும்பா ன்மையா னவர்கள் பாதி க்க‍ப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் சுத்த‍மான புதிய முடக்கத்தான்கீரையை எடுத்து அதன் இலைகளை கிள்ளி வாணலியில் போட்டு தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக‌ வதக்கவேண்டும். அதன்பிறகு அதில் இஞ்சி , கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிட வேண்டும். இதே போல் தினமும் முடக்கத்தான் துவையலை சாப்பிட்டு வந்தால் மூட்டு தொடர்பான அத்தனை நோய்களும் குணமாகும். மூட்டுக்கள் இழந்த சக்தியை மீண்டும் பெறும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறை கள்.
உரிய மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்வது நலம்பயக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...