Thursday, June 25, 2020

இடையில் நடந்தது என்ன?

அனைவருக்கும் வணக்கம்.
திருமதி V.K.சசிகலா வரும் ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலை என்றும் அதன் பின் அ.இ.அ.தி.மு. அப்படியாகிவிடும் இப்படியாகிவிடும் என்கிறார்கள் அவர்கள் எல்லாம் எனது கீழ்காணும் கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தால் நான் V.K.சசிகலா தலைமை ஏற்று செயல்பட தயார் அவை.
1. 22.9.2016 அன்று மாண்புமிகு அம்மாவை மருத்துவமனையில் அணுமதித்தவர்கள்5.12.16அன்று உயிரற்ற சடலமாகதான் வெளியில் கொண்டுவந்தார்கள் இடையில் நடந்தது என்ன?
2. 2009ம் ஆண்டு மாண்புமிகு அம்மாவால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவின் பெரும்படை அம்மாவின் உயிரற்ற உடல் அருகே இருக்க அணுமதித்தது யார்?
3. மாண்புமிகு அம்மாவின் இறுதி சடங்குகளை அம்மாவிற்க்கு எந்தவிதத்திலும் ரத்த சம்மந்தம் இல்லாத சசிகலாவை செய்யவும் ரத்த உறவாகிய ஜெ.தீபாவை செய்யவிடாமலும் தடுத்தது யார்??
4. அம்மா அவர்கள் நான் உங்களின் பிராத்தனைகளால் நலம்பெற்றுவிட்டேன் என்று தன் கைப்பட அறிக்கை எழுதியதாக கூறியவர்கள் அவரை மக்கள் மத்தியில் உயிருடன் ஏன் காட்டவில்லை??
5. பேரவையில் திரு. OPS, திரு.ஸ்டாலினை பார்த்து சிரித்ததற்க்கு பொங்கி எழுந்த சசிகலா தன் மீது கொலை பழியை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் சுமத்திய வேளையில் அமைதி காத்தது ஏன்? திரு.சோ மறைவுக்கு முதல்வர் ops சை அனுப்பாமல்தான் சென்றது ஏன்???
6. மாண்புமிகு அம்மா இறந்து 30 நாள் முடியாத வேளையில் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவி மீது ஏன் அவ்வளவு அவசரம்??
7 உங்கள் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்ட வேளையில் ஓடோடி வந்த நீங்கள் அவரை உயர்ந்த சிகிச்சை அளித்து காப்பாற்றினீர்கள் அதை ஏன் மாண்புமிகு அம்மாவுக்கு அளிக்கவில்லை??
8 அம்மா விட்டு சென்ற அ.தி.மு.க.வை கட்டி காப்போம் என்ற நீங்கள் உங்க அக்கா மகன் அ.தி.மு.க.வை அழிக்க அ.ம.மு.க.வை துவங்கிய உடன் வாய்மூடி மவுனம் காத்தது ஏன்???
9.14.2.2017 தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நீங்கள் அந்த மனுவில் முதல் குற்றவாளி உயிருடன் இல்லாத காரணத்தால் எங்களையும் விடுவிக்க வேண்டும் என்றீர்களே ஆக அம்மாவை குற்றவாளியாக்கி அழகு பார்க்கும் நீங்களா அம்மாவின் உண்மை தோழி??
10. 5.12.16 நள்ளிரவில் இறந்த அம்மாவை அடுத்த 15மணி நேரத்தில் அடக்கம் செய்யவேண்டிய அவசியம்தான் என்ன? சாதாரணமாக இறந்த உடல் 3 நாள்வரை பதப்படுத்தாமலே நல்ல நிலையில் இருக்கும்பொழுது ஒரு மாநில முதல்வர் பாராளுமன்ற 3வது கட்சியின் தலைவரை குறைந்தபட்சம் 3 நாள்கூட அஞ்சலிக்கு வைக்காததன் மர்மம்தான் என்ன??
11. மாண்புமிகு அம்மா தன் கண் போல் பார்த்து பார்த்து வளர்த்த ஜெயா டிவி, Dr. நமது எம்.ஜீஆர். நாளிதழ்களில் அவர் உயிரை தந்து பெற்று தந்த அரசு குறித்து வசைபாடும் நீங்களா அம்மா வழிநடப்பவர்கள்???
12. மாண்புமிகு அம்மா 1.50 கோடி தொண்டர்களை கொண்டு உருவாக்கிய இரும்புகோட்டையாம் அ.தி.மு.க.வில் யார் அனுமதி பெற்று உங்கள் அக்கா மகன் TTV தினகரனை துணை பொதுச் செயலாளர் ஆக்கினீர்கள்??
13. மாண்புமிகு புரட்சிதலைவரின் பயிற்ச்சி பட்டறையில் பயிற்ச்சி பெற்று மாண்புமிகு அம்மா அவர்கள்கொள்கைபரப்பு செயலாளர் முதல் பல பதவிகளை வகித்து பின் பொதுச்செயலாளாரகஉயர்ந்தார் அ.தி.மு.க.வில் அம்மா இருந்தவேளையில் நீங்கள் வகித்த பதவிதான் என்ன??
14. மாண்புமிகு அம்மா மரணம் பற்றி பேசினால் நட்புக்கு ஏற்படுத்தும் கொச்சை என்ற நீங்கள் ஓட்டுக்காக மாண்புமிகு அம்மாவின் புகைபடத்தை சித்தரித்து வெளியிட்ட உங்கள் துதிபாடிகளை கண்டிக்காதது ஏன்???
15 மாண்புமிகு புரட்சிதலைவர் புரட்சிதலைவியை தலைவராக ஏற்று செயல்பட்ட தொண்டர்கள் உங்களை தலைவராக ஏற்க்க உங்களிடம் உள்ள தனிசிறப்பு, திறமைதான் என்ன???
16. இதை எல்லாம் விட நீங்கள் பதவிவெறிபிடித்துதான் பதவி மேல் உள்ள மோகத்தில்தான் அம்மாவை கொலை செய்தீர்கள் என பகிரங்கமாக நாங்கள் குற்றம் சுமத்திகிறோம்.
17 ஆயிரம்தான்புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்டாலும் பூனை புலியாக முடியாது கழுதை குதிரையாக முடியாது என்று அ.தி.முக.வின் அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் கூறுகிறார்கள் இதற்கு உங்களின் விளக்கம்தான் என்ன???
18 சாதாரண நீர்சத்து குறைப்பாட்டால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அம்மாவுக்கு 75 நாட்களில் உலகில் உள்ள அத்துனைவியாதியும் வந்தது எப்படி? அப்படி வந்திருந்தாலும் அவரை உயரிய சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்???
இதுபோன்ற விடை தெரியாத பல புதிர் கேள்விகளுக்கு திருமதி V.K.சசிகலா விளக்கம் தந்தால் அவர் தலைமை ஏற்று செயல்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...