Monday, June 22, 2020

கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது..

பட்டப்பகலில் பா.ஜ.க நிர்வாகி வீட்டிற்கு சென்று ரவுடித்தனம் செய்து, தகாத வார்த்தைகளால் பேசிய மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி..
#கட்சியா..? இல்லை #ரவுடிக்கூட்டமா..?

மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மூர்த்தி. சமீபத்தில் இவரின் தூண்டுதலின் பெயரில், தி.மு.க ஒன்றிய குழு தலைவர் 14 லட்சம் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அ.தி.மு.க கவுன்சிலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
Image may contain: 3 people, people standing
மதுரை மாவட்ட கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த மணிமேகலை உள்ளார். இவர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தூண்டுதலின் பேரில் ஒன்றியத்தில் இருக்கும் பொது நிதியில் இருந்து 14,14,888 ரூபாயை சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கு மாற்றம் செய்வதாக கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
இது குறித்து அவதார் செய்தி இணையதளத்தில் செய்தி நேற்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி பதிவிடுவதில் பா.ஜ.க தமிழக இளைஞரணி செயற்குழு உறுப்பினரும், மதுரை கோட்ட இளைஞரணி பொறுப்பாளருமான சங்கரபாண்டிக்கு தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்த தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தி, தன் ரவுடி சகாக்களுடன் அவரின் இல்லாத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். சங்கரபாண்டியின் மனைவியை செறுப்பால் அடிக்கவும் முனைந்துள்ளார். இவை அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.
ரவுடித்தனத்தில் ஈடுபட வந்த தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தியிடம் சங்கரபாண்டி "எதுவாக இருந்தாலும் போலிஸில் புகாரோ, வழக்கோ தொடுக்கவும் அங்கு சட்டபூர்வமாக் தங்களை சந்திக்கிறேன்" என்று சொல்லியுல் உச்சக்கட்ட ரவுடித்தனத்தில் ஈடுபட்டதும் இல்லாமல், தகாத வார்த்தைகளில் சங்கரபாண்டியையும் அவர் மனைவியையும் தி.மு.க ரவுடி கும்பல் பேசியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க தமிழக மாநில இளைஞரணி தலைவர் "மதுரை கிழக்கு திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஊழல்களை பொதுவெளியில் வெளிச்சம் போட்டு காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்ற எம்எல்ஏ மூர்த்தி தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவரது மனைவியை அடிக்க சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது..
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திமுக எம்எல்ஏ வின் இந்த அரஜாகப்போக்கிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போதே பட்டப்பகலில் இத்தனை அட்டூழியத்திலும், ரவுடித்தனத்திலும் ஈடுபடும் தி.மு.க எம்.எல்.ஏ-வின் செயல்பாட்டை பார்த்து அதிர்ச்சியில் உரைந்துள்ளனர் தமிழக மக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...