Wednesday, June 24, 2020

*காதுவலி தானே என்று அலட்சியமாக* *இருந்து விடாதீர்கள*❗❗❗❗ *காது கொடுத்துக் கேளுங்க..*❗❓

*ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது.* *இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களைப் பாதித்து செவிட்டுத் தன்மை உருவாகிறது.*
*ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப/படுகிறது.*
*சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்து வதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தைக் கேட்கும் போது காது நரம்புகள் பாதிப் படைகின்றன.*
*அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தைக் குறைத்துக் கொடுக்கும் உப கரணங்களைப் பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.*
*குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்குப் பேச்சுத்திறமை கிடைக்க வில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக் கின்றனர். கிராமத்திலோ 10 வயது வரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.*
*தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.*
*காதுக்குள் அழுக்கு சேர்ந்தால்* *"#பட்ஸ்" மூலம்* *சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக* *"#பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு* *அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம்*.
*6 மாதங் களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது*.
*#காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது*
*நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.*
*கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது*.
*கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம*்.
*பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப் படையலாம்*.
*மேற்கண்ட காரணங்கள்* *யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம*
*கேட்கும் திறன் குறைந்து விடுகிறது.*
#இதுதவிர…………
காது சவ்வு பாதிப்பு,
காது எலும்புகள் பாதிப்பு,
காதில் சீழ்பிடித்தல்,
காது சவ்வில் ஓட்டை விழுதல்,
அதிக இரைச்சல்
காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
#காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "#மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
பலர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவதுவைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது.
காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும்.
இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம். மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், சூடான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள். இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காது கேளாமைகூட ஏற்படலாம்.
காதில் இருந்து தானாகவே வெளிவரும் மெழுகை, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
தினமும் வெளிக்காதையும் சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.
குளிக்கும்போது, காதுக்குப் பின்புறம் சோப்பைத் தடவி, மிதமாகத் தேய்த்துவிட வேண்டும்.
குளித்து முடித்த பின்னர், துண்டால் விரலைச் சுற்றி காது மடல்களையும் குழியின் மேற்புறத்தையும், சுத்தம் செய்ய வேண்டும்.
எந்தக் காரணத்துக்காகவும் உட்காதினுள் விரலை விடக் கூடாது. காதில் அரிப்பு ஏற்பட்டாலோ சீழ் வடிந்தாலோ, தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
ஒருவர் பயன்படுத்திய ஹெட்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.
ஹெட்போனில் உள்ள ரப்பரை, குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
செல்போன் ஸ்பீக்கரில் தூசு சேராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய செல்போனை இன்னொருவர் பயன்படுத்தும்போது, ஒரு முறை துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய மருத்துவம் கூடாது.
 காது வலி,இரைச்சல், கேளாமை, கைமருந்து...
💊வெங்காயசாறு காது வலிக்குச் சிறந்த மருந்து. அதை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தலாம்.
💊கடுகை அரைத்து காதின் பின்புறத்தில் போட்டால் காதுவலியும், பழுப்பு வருவதும் குறையும்,
💊கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துவர காதுகளுக்கும் புலன்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
💊கருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றிப் போட வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் சத்தத்தையும் குறைக்கும்.
சுக்குப்பால் கஷாயம் குடித்தாலும் காதில் ஏற்படும் சத்தம் குறையும்.
💊பூண்டைத் தோல் நீக்கித் தலைப்ப குதியை அகற்றி விட்டு காதில் வைத்தால் காது வலிகுறையும்.
💊எலுமிச்சம் பழசாறு 4 துளிகள் (அ) வெற்றிலைச்சாறு 4 துளிகள் காதினில் விட குணமாக்கும்.தொடர்ந்து வலி இருப்பின் ஒரு வெள்ளைப் பூண்டினை நல்லெண்ணையில் பொறித்து எடுத்து மூன்று சொட்டுகள் விட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
💊காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வலி குறையும்.
💊தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.
💊தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
💊மருதாணியின் வேரை நசுக்கி அதில் வரும் சாற்றினை காதில் விட்டால், காது வலி தீரும்.
💊கொஞ்சம் நல்லெண்ணையில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து, பின் அந்த எண்ணெய்யை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி குறையும்.
💊முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.
💊வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.
💊தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
💊மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.
💊சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.
💊தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது உள்ளியைப் (வெங்காயம்) பிழிந்து காதில் விட்டாலோ காது வலி உடனடியாகக் குணமாகும்.
💊தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
💊ஆலிவ் எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.,ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.
💊வாழை மட்டை அடுப்பு தீயில் லேசா வைத்து வாட்டி 5 சொட்டு 5 நாள் இரவில் ஊற்றவும். காது வலி தீரும்.
💊வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் குறையும்.
👉காதுவலிக்கு👈
விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, வாயை மூடி, வாயில் காற்றை நிரப்புங்கள். கன்னங்கள் உப்பலாகும்.
அப்போது காற்றை காதுவழியாக மெதுவாக வெளியேற்றுங்கள் காது சமநிலைக்கு வந்து காதுவலி நின்றுவிடலாம். காது அடைப்பும் சரியாகிவிடும்.
🔴 காதுவலிதானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால் அது காது செவிடாக வழிவகுத்துவிடும். மாற்றுமறுத்துவத்தின் படி காதுக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உள்ளது...உடனே பரிசோதனை செய்து கொள்வது நன்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...